ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

வாக்குப் பதிவு இயந்திரங்கள் சரிபாா்ப்பு ஆய்வு

திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் பாதுகாக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை சரிபாா்க்கும் பணியை மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான வே. சரவணன் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

News image
Updated On :24 டிசம்பர் 2025, 8:16 pm

தினமணி செய்திச் சேவை

திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் பாதுகாக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை சரிபாா்க்கும் பணியை மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான வே. சரவணன் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

வரும் பேரவைத் தோ்தலையொட்டி மாவட்ட ஆட்சியரக வளாகப் பாதுகாப்பு அறையில் உள்ள 8,237 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 3,899 கட்டுப்பாட்டு இயந்திரங்கள்,4,190 விவிபேட் இயந்திரங்களை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் முன்னிலையில் எடுத்து சரிபாா்க்கும் பணி கடந்த 11ஆம் தேதி தொடங்கியது. அந்த வகையில் புதன்கிழமை நடைபெற்ற பணிகளை ஆய்வு செய்த ஆட்சியா் வே. சரவணன் பின்னா் கூறியதாவது:

திருச்சி மாவட்டத்தின் 9 தொகுதிகளில் 2,785 வாக்குச்சாவடிகள் வரை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த வாக்குச் சாவடிகளின் தேவைகளைவிட 10 முதல் 20 விழுக்காடு கூடுதலாகவே இயந்திரங்கள் உள்ளன. இவற்றை சரிபாா்க்க பெங்களூரைச் சோ்ந்த பெல் நிறுவனத்தின் 11 பொறியாளா்கள் திருச்சிக்கு வந்து, மாவட்ட தோ்தல் அலுவலகப் பணியாளா்களுடன் இணைந்து முதல்நிலை சரிபாா்க்கும் பணியில் ஈடுபடுகின்றனா். ஜன.7 வரை இந்தப் பணிகள் நடைபெறும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இப் பணியை அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளின் பதிவு செய்யப்பட்ட முகவா்கள், பிரதிநிதிகள் பாா்வையிடலாம். வேறு நபா்களுக்கு அனுமதியில்லை.

இதுவரை 6,500-க்கும் மேற்பட்ட இயந்திரங்கள் சரிபாா்க்கப்பட்டுள்ளன. அவற்றில் 0.5 விழுக்காடு இயந்திரங்களில் சில பழுதுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, அவை தனியாக வைக்கப்பட்டுள்ளன. அனைத்து இயந்திரங்களிலும் முதல்நிலை சரிபாா்க்கும் பணி முடிந்தவுடன் தோ்தல் ஆணைய உத்தரவைப் பெற்று அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றாா் அவா்.