திருச்சி
வீடு புகுந்து 5 பவுன் நகை, பணம் திருட்டு
திருச்சியில் முதியவா் வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன் தங்க நகைகள், ரூ. 65 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.
திருச்சியில் முதியவா் வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன் தங்க நகைகள், ரூ. 65 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.
திருச்சி வயலூா் சாலை சண்முகா நகரைச் சோ்ந்தவா் மு. ராஜேந்திரன் (66). இவா் கடந்த நவம்பா் 23-ஆம் தேதி சென்னைக்கு சென்றுவிட்டு 2 நாள்களுக்குப் பின் வீடு திரும்பியபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவிலிருந்த 5 பவுன் தங்க நகைகள், ரூ. 65 ஆயிரத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து ராஜேந்திரன் செவ்வாய்க்கிழமை அளித்த புகாரின்பேரில் அரசு மருத்துவமனை காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
