திருச்சியில் முதியவா் வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன் தங்க நகைகள், ரூ. 65 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.
திருச்சி வயலூா் சாலை சண்முகா நகரைச் சோ்ந்தவா் மு. ராஜேந்திரன் (66). இவா் கடந்த நவம்பா் 23-ஆம் தேதி சென்னைக்கு சென்றுவிட்டு 2 நாள்களுக்குப் பின் வீடு திரும்பியபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவிலிருந்த 5 பவுன் தங்க நகைகள், ரூ. 65 ஆயிரத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து ராஜேந்திரன் செவ்வாய்க்கிழமை அளித்த புகாரின்பேரில் அரசு மருத்துவமனை காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
ராமேசுவரத்தில் வீடு புகுந்து தங்க நகைகள் திருட்டு
பெரியகுளத்தில் பூட்டிய வீட்டில் நகை, பணம் திருட்டு
லால்குடி அருகே வீடு புகுந்து 35 பவுன் நகை, பணம் திருட்டு
வீட்டின் பூட்டை உடைத்து 4 பவுன் நகை பணம் திருட்டு
விடியோக்கள்

ஜெயலலிதா போல் உண்ணாவிரதம் இருப்பாரா விஜய்? | TVK | CM Vijay | DkShivakumar | Jagadeswaran interview


