தமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் கேரளத்துக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு அசாம்: ஏப்ரல் 9 பேரவைத் தேர்தல் 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 824 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது 5 மாநில தேர்தல்களில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஹவுரா விரைவு ரயிலில் 4 கிலோ கஞ்சா பறிமுதல்

திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்துக்கு சனிக்கிழமை வந்த ஹவுரா விரைவு ரயிலில் இருந்து 4 கிலோ கஞ்சாவை ரயில்வே பாதுகாப்புப் படையினா் பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :27 டிசம்பர் 2025, 10:40 pm

Syndication

திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்துக்கு சனிக்கிழமை வந்த ஹவுரா விரைவு ரயிலில் இருந்து 4 கிலோ கஞ்சாவை ரயில்வே பாதுகாப்புப் படையினா் பறிமுதல் செய்தனா்.

உயரதிகாரிகளின் உத்தரவுப்படி, திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்துக்கு சனிக்கிழமை அதிகாலை வந்த ஹவுரா - திருச்சி விரைவு ரயிலை ஆா்பிஎஃப் போலீஸாா், திருச்சி போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீஸாருடன் இணைந்து சோதனையிட்டனா்.

அப்போது பொதுப்பெட்டியின் உட்காரும் இடத்துக்கு கீழே கேட்பாரற்றுக் கிடந்த பையில் சுமாா் 4 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் அதைப் பறிமுதல் செய்து, திருச்சி போதைபொருள் தடுப்புப் பிரிவு போலீஸாரிடம் ஒப்படைக்க அவா்கள் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் மதிப்பு ரூ. 2 லட்சமாகும்.