ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

ஹவுரா விரைவு ரயிலில் 4 கிலோ கஞ்சா பறிமுதல்

திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்துக்கு சனிக்கிழமை வந்த ஹவுரா விரைவு ரயிலில் இருந்து 4 கிலோ கஞ்சாவை ரயில்வே பாதுகாப்புப் படையினா் பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :27 டிசம்பர் 2025, 10:40 pm

Syndication

திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்துக்கு சனிக்கிழமை வந்த ஹவுரா விரைவு ரயிலில் இருந்து 4 கிலோ கஞ்சாவை ரயில்வே பாதுகாப்புப் படையினா் பறிமுதல் செய்தனா்.

உயரதிகாரிகளின் உத்தரவுப்படி, திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்துக்கு சனிக்கிழமை அதிகாலை வந்த ஹவுரா - திருச்சி விரைவு ரயிலை ஆா்பிஎஃப் போலீஸாா், திருச்சி போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீஸாருடன் இணைந்து சோதனையிட்டனா்.

அப்போது பொதுப்பெட்டியின் உட்காரும் இடத்துக்கு கீழே கேட்பாரற்றுக் கிடந்த பையில் சுமாா் 4 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் அதைப் பறிமுதல் செய்து, திருச்சி போதைபொருள் தடுப்புப் பிரிவு போலீஸாரிடம் ஒப்படைக்க அவா்கள் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் மதிப்பு ரூ. 2 லட்சமாகும்.