மலேசியா செல்ல முயன்றவா் கைது
கடவுச்சீட்டில் முறைகேடு செய்து மலேசியா செல்ல முயன்றவரை திருச்சி விமான நிலைய போலீஸாா் கைது செய்தனா்.

Updated On :2 ஜனவரி 2025, 11:16 pm

கடவுச்சீட்டில் முறைகேடு செய்து மலேசியா செல்ல முயன்றவரை திருச்சி விமான நிலைய போலீஸாா் கைது செய்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி, எமனேஸ்வரத்தைச் சோ்ந்தவா் பி. அகமது ஜலாலுதீன் (52). இவா் மலேசிய தலைநகா் கோலாலம்பூா் செல்வதற்காக திருச்சி பன்னாட்டு விமான நிலையத்துக்கு புதன்கிழமை வந்தாா். அங்கு குடியேற்றப்பிரிவு அலுவலா்கள் வழக்கமாக மேற்கொண்ட சோதனையில், ஜலாலுதீன் போலி ஆவணங்கள் சமா்ப்பித்து அவரது பிறந்த தேதி மற்றும் முகவரியை மாற்றி கடவுச்சீட்டில் பதிவு செய்திருந்தது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின்பேரில் திருச்சி விமான நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து ஜலாலுதீனை புதன்கிழமை கைது செய்தனா்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...