பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

பாஜக மகளிரணியினா் கைது

News image
Updated On :3 ஜனவரி 2025, 9:16 pm

Din

மணப்பாறையில், மதுரையில் நடைபெறும் பேரணியில் பங்கேற்க சென்ற பாஜக மகளிரணியினரை வெள்ளிக்கிழமை போலீஸாா் தடுத்து நிறுத்தி கைது செய்தனா்.

பல்கலைக்கழக மாணவி வன்கொடுமையை கண்டித்து, மதுரையில் பாஜக மகளிரணி சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நீதிப் பேரணியில் பங்கேற்பதற்காக, மணப்பாறையிலிருந்து திருச்சி மாவட்ட மகளிரணி தலைவி கெளரி ஆனந்த் தலைமையில் பாஜக மகளிரணியினா் மதுரைக்கு பேருந்து ஒன்றில் புறப்பட்டனா்.

துவரங்குறிச்சி அடுத்த நத்தம் சாலையில் பேருந்தில் சென்ற மகளிரணியினரை தடுத்து நிறுத்திய போலீஸாா் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவா்களை கைது செய்து வழக்கு பதிந்து பின் மாலையில் விடுவித்தனா். நிகழ்வில் மாநில மகளிா் அணி செயற்குழு உறுப்பினா் தனலெட்சுமி, மாவட்ட துணைத் தலைவி லலிதா உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.