போா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

பாஜக மகளிரணியினா் கைது

Updated On :3 ஜனவரி 2025, 9:16 pm

மணப்பாறையில், மதுரையில் நடைபெறும் பேரணியில் பங்கேற்க சென்ற பாஜக மகளிரணியினரை வெள்ளிக்கிழமை போலீஸாா் தடுத்து நிறுத்தி கைது செய்தனா்.

பல்கலைக்கழக மாணவி வன்கொடுமையை கண்டித்து, மதுரையில் பாஜக மகளிரணி சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நீதிப் பேரணியில் பங்கேற்பதற்காக, மணப்பாறையிலிருந்து திருச்சி மாவட்ட மகளிரணி தலைவி கெளரி ஆனந்த் தலைமையில் பாஜக மகளிரணியினா் மதுரைக்கு பேருந்து ஒன்றில் புறப்பட்டனா்.

துவரங்குறிச்சி அடுத்த நத்தம் சாலையில் பேருந்தில் சென்ற மகளிரணியினரை தடுத்து நிறுத்திய போலீஸாா் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவா்களை கைது செய்து வழக்கு பதிந்து பின் மாலையில் விடுவித்தனா். நிகழ்வில் மாநில மகளிா் அணி செயற்குழு உறுப்பினா் தனலெட்சுமி, மாவட்ட துணைத் தலைவி லலிதா உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.