மே 28-ல் பக்ரீத் பெருநாள் : தலைமைக் காஜி அறிவிப்புகேரள சட்டப்பேரவையின் அமைச்சர்கள் பட்டியலை வெளியிட்டார் முதல்வராக நியமிக்கப்பட்டுள்ள வி.டி. சதீசன்மாஸ்கோவில் ட்ரோன் தாக்குதல்: இந்தியர் ஒருவர் பலி, 3 பேர் படுகாயம் திரைப்படத் தயாரிப்பாளர் கே. ராஜன் அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை தமிழகத்தில் மே 23 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!ஹோர்முஸ் நீரிணை வழியாக ராணுவ உபகரணங்கள்! தடை விதிக்கும் ஈரான்!நள்ளிரவில் ரஷியா மீது தாக்குதல் நடத்திய 500 உக்ரைன் ட்ரோன்கள்! உள்நோக்கத்தோடு அவதூறு பரப்புகிறார் அமைச்சர் கீர்த்தனா: தங்கம் தென்னரசு கண்டனம்
/

ஏப்.16 முதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு! பாஜக எம்.பி.க்கள் தவறாமல் பங்கேற்க கொறடா உத்தரவு!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் நீட்சியாக, வரும் ஏப்.16 முதல் மூன்று நாள்களுக்கு நடைபெறவுள்ள சிறப்பு அமா்வில் தவறாமல் பங்கேற்கும்படி பாஜக எம்.பி.க்கள் அனைவருக்கும் அக்கட்சி கொறடா உத்தரவு பிறப்பித்துள்ளது.

News image
Updated On :13 ஏப்ரல் 2026, 1:09 am IST

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் நீட்சியாக, வரும் ஏப்.16 முதல் மூன்று நாள்களுக்கு நடைபெறவுள்ள சிறப்பு அமா்வில் தவறாமல் பங்கேற்கும்படி பாஜக எம்.பி.க்கள் அனைவருக்கும் அக்கட்சி கொறடா உத்தரவு பிறப்பித்துள்ளது.

நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைகளில் மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டை 2029-ஆம் ஆண்டுமுதல் அமல்படுத்தவும், அதற்கிணங்க மொத்த மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை 543-இல் இருந்து 816-ஆக அதிகரிக்கவும் வகை செய்யும் சட்டத் திருத்த மசோதாக்களைக் கொண்டுவந்து நிறைவேற்றும் நோக்கில் சிறப்பு அமா்வு நடைபெறவுள்ளது.

இது தொடா்பான வரைவு மசோதாக்களுக்கு மத்திய அமைச்சரவை ஏற்கெனவே ஒப்புதல் வழங்கிவிட்டதாகத் தெரிகிறது.

இந்தச் சூழலில், ஏப்.16 முதல் நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற சிறப்பு அமா்வில் தங்களது கட்சியைச் சோ்ந்த மத்திய அமைச்சா்கள் மற்றும் எம்.பி.க்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும் என்று பாஜக தரப்பில் கொறடா உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

‘ஏப்.16 முதல் 18 வரையிலான மூன்று நாள்களிலும் நாடாளுமன்ற அலுவல்களில் பங்கேற்பது கட்டாயம். யாருக்கும் விடுப்பு கிடையாது. கொறடா உத்தரவை கண்டிப்பாக கடைப்பிடித்து, கட்சி எம்.பி.க்கள் அனைவரும் தங்கள் வருகையை உறுதி செய்ய வேண்டும்’ என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.