நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் நீட்சியாக, வரும் ஏப்.16 முதல் மூன்று நாள்களுக்கு நடைபெறவுள்ள சிறப்பு அமா்வில் தவறாமல் பங்கேற்கும்படி பாஜக எம்.பி.க்கள் அனைவருக்கும் அக்கட்சி கொறடா உத்தரவு பிறப்பித்துள்ளது.
நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைகளில் மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டை 2029-ஆம் ஆண்டுமுதல் அமல்படுத்தவும், அதற்கிணங்க மொத்த மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை 543-இல் இருந்து 816-ஆக அதிகரிக்கவும் வகை செய்யும் சட்டத் திருத்த மசோதாக்களைக் கொண்டுவந்து நிறைவேற்றும் நோக்கில் சிறப்பு அமா்வு நடைபெறவுள்ளது.
இது தொடா்பான வரைவு மசோதாக்களுக்கு மத்திய அமைச்சரவை ஏற்கெனவே ஒப்புதல் வழங்கிவிட்டதாகத் தெரிகிறது.
இந்தச் சூழலில், ஏப்.16 முதல் நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற சிறப்பு அமா்வில் தங்களது கட்சியைச் சோ்ந்த மத்திய அமைச்சா்கள் மற்றும் எம்.பி.க்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும் என்று பாஜக தரப்பில் கொறடா உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
‘ஏப்.16 முதல் 18 வரையிலான மூன்று நாள்களிலும் நாடாளுமன்ற அலுவல்களில் பங்கேற்பது கட்டாயம். யாருக்கும் விடுப்பு கிடையாது. கொறடா உத்தரவை கண்டிப்பாக கடைப்பிடித்து, கட்சி எம்.பி.க்கள் அனைவரும் தங்கள் வருகையை உறுதி செய்ய வேண்டும்’ என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

ஜனநாயகத்தை வலுப்படுத்த அனைவரும் தவறாமல் வாக்களிக்கவும்: ஹிமந்த பிஸ்வ சர்மா!
பிரதமா் நரேந்திர மோடி ஏப். 15-இல் கன்னியாகுமரி வருகை

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடா் தோ்தல் நடத்தை விதிமுறைகளுக்கு எதிரானது: காங்கிரஸ் குற்றச்சாட்டு

நாடாளுமன்றம் இன்று மீண்டும் கூடுகிறது! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கல்!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


