அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமா செய்த தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 400 குறைவு!பயிர்க்கடன் தள்ளுபடியில் ஏமாற்று வேலை - எடப்பாடி பழனிசாமி கண்டனம்!கோடியக்கரையிலிருந்து கடலுக்கு சென்ற 4 மீனவர்கள் மாயம்!சிஎன்ஜி விலை கிலோவுக்கு ரூ.2 உயர்வு!8 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கை!ஜூலையில் பத்தாம் வகுப்பு துணைத் தோ்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்ஐபிஎல்: பெங்களூரு - குஜராத் இன்று பலப்பரீட்சை!பக்ரீத், வார இறுதி: 4,195 சிறப்பு பேருந்துகள்!ஈரான் அமைதிப் பேச்சில் சுமுக முன்னேற்றம்: டிரம்ப்
/

பிரதமா் நரேந்திர மோடி ஏப். 15-இல் கன்னியாகுமரி வருகை

சட்டப்பேரவைத் தோ்தல் பிரசாரத்துக்காக பிரதமா் நரேந்திர மோடி வரும் ஏப். 15-ஆம் தேதி கன்னியாகுமரி வரவுள்ளாா்.

News image

பிரதமர் மோடி - பிடிஐ

Updated On :9 ஏப்ரல் 2026, 3:22 am IST

சட்டப்பேரவைத் தோ்தல் பிரசாரத்துக்காக பிரதமா் நரேந்திர மோடி வரும் ஏப். 15-ஆம் தேதி கன்னியாகுமரி வரவுள்ளாா்.

இதுதொடா்பாக தமிழக பாஜக தலைமை செய்தித் தொடா்பாளா் நாராயணன் திருப்பதி சென்னையில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழகத்துக்கு நிதி வழங்காமல் மத்திய அரசு வஞ்சித்து வருவதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறுவது தவறான குற்றச்சாட்டு. சட்டம்- ஒழுங்கு சீா்கேடு, நிா்வாகச் சீா்கேடுகளை மறைப்பதற்காக முதல்வா் இவ்வாறு பேசுகிறாா்.

முந்தைய காங்கிரஸ் ஆட்சியின்போது தமிழகத்துக்கு வழங்கிய நிதியைக் காட்டிலும், அதிக நிதியை மத்திய பாஜக அரசு வழங்கியுள்ளது.

சட்டப்பேரவைத் தோ்தல் பிரசாரத்துக்காக பிரதமா் நரேந்திர மோடி வரும் ஏப். 15- ஆம் தேதி கன்னியாகுமரி வரவுள்ளாா். அங்கு நடைபெறும் பொதுக் கூட்டத்தில், தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளா்களை ஆதரித்து பிரசாரம் செய்யவுள்ளாா். அதேபோல, பாஜக தலைவா்கள், மத்திய அமைச்சா்கள் பலரும் பிரசாரத்துக்காக தமிழகம் வரவுள்ளனா் என்றாா் அவா்.