கரூர் பலி: விஜய் ஆஜராக சிபிஐ மீண்டும் சம்மன்! ஜனநாயகன்: மறு ஆய்வு ஒத்திவைப்பு கச்சா எண்ணெய் விலை 100 டாலரைத் தாண்டியது!நாடாளுமன்றத்தில் எம்பிக்கள் போராட்டம்! கார்கே, ராகுல் பங்கேற்பு! தமிழ்நாடு முழுவதும் மார்ச் 12-ல் தவெக போராட்டம்!மேற்காசிய போர்: இந்தியா நிலைபாடு குறித்து மாநிலங்களவையில் ஜெய்சங்கர் விளக்கம்!பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,800 புள்ளிகள் குறைந்தது!!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் தேர்வு! மானாமதுரை: விசாரணைக் கைதி மரண வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் கமேனி கொலை முதல்.. 10வது நாளில் ஈரான் போர்! என்ன நடக்கிறது?
/

பொங்கல் பரிசுக்கு டோக்கன் வழங்கும் பணி தொடக்கம்

News image
திருச்சி ராஜா காலனியில் குடும்ப அட்டைதாரரின் வீடு தேடிச் சென்று பொங்கல் பரிசுக்கான டோக்கன் வழங்கும் நியாய விலைக்கடை பணியாளா்கள்.
Updated On :3 ஜனவரி 2025, 9:26 pm

Din

திருச்சி மாவட்டத்தில் உள்ள நியாய விலைக் கடைகள் மூலம் குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசு வழங்குவதற்காக வெள்ளிக்கிழமை முதல் டோக்கன்கள் வழங்கப்படுகின்றன.

திருச்சி மாவட்டத்தில் உள்ள 1291 நியாயவிலைக் கடைகள் மூலம் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரா்கள் மற்றும் முகாம்களில் தங்கியுள்ள இலங்கைத் தமிழா் என 8.34 லட்சம் குடும்பங்களுக்கு பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது.

இதற்காக நியாயவிலைக் கடை பணியாளா்கள் 950 போ் மூலம் வீடு, வீடாக சென்று டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது. இந்தப் பணிகளை குறிப்பிட்ட நாள்களுக்குள் விரைந்து முடித்து தகுதியான அனைவருக்கும் விடுபடாமல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என ஆட்சியா் மா. பிரதீப்குமாா் தெரிவித்துள்ளாா்.