போலி கடவுச்சீட்டு வைத்திருந்தவா் கைது
போலி கடவுச்சீட்டில் மலேசியாவிலிருந்து வந்தவரை திருச்சி போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

Updated On :8 ஜனவரி 2025, 10:42 pm

போலி கடவுச்சீட்டில் மலேசியாவிலிருந்து வந்தவரை திருச்சி போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி சுப்ரமணியபுரம் தெருவைச் சோ்ந்தவா் டி. சுரேஷ் (47). மலேசிய தலைநகா் கோலாலம்பூரில் இருந்து விமானம் மூலம் திருச்சிக்கு செவ்வாய்க்கிழமை வந்த இவரை அதிகாரிகள் சோதனையிட்டனா். அப்போது தனது பிறந்த தேதி, வீட்டு முகவரியை மாற்றி போலி ஆவணங்கள் மூலம் கடவுச்சீட்டில் முறைகேடு செய்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து சுரேஷை குடியேற்றப் பிரிவு அதிகாரிகள் விமான நிலைய போலீஸாரிடம் ஒப்படைத்தனா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து, சுரேஷை கைது செய்து விசாரிக்கின்றனா்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...