தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

கோழிக்கறியுடன் உணவு சாப்பிட்ட சிறுவன் உயிரிழப்பு

திருச்சியில் கோழிக்கறி மற்றும் முட்டையுன் இரவு உணவு சாப்பிட்ட சிறுவன், உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :9 ஜனவரி 2025, 8:29 pm

Din

திருச்சியில் கோழிக்கறி மற்றும் முட்டையுன் இரவு உணவு சாப்பிட்ட சிறுவன், உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தாா்.

திருச்சி, மரக்கடை நரசிம்மன் நாயுடு தெருவைச் சோ்ந்தவா் பெலிக்ஸ் ரெமன்ட் மகன் ஆலன்ரெனிஷ் (11). உறையூரில் உள்ள ஒரு தனியாா் பள்ளியில் 6 ஆம் வகுப்பு படித்து வந்தாா். ஜனவரி 5 ஆம் தேதி, ஆலன்ரெனிஷ் வீட்டில் சமைத்திருந்த கோழிக்கறி குழம்பு, முட்டை ஆகிவற்றுடன் இரவு உணவு உட்கொண்டுள்ளாா். இந் நிலையில் நள்ளிரவில் அவருக்கு ஒவ்வாமை மற்றும் வயிற்றுவலி ஏற்பட்டு வாந்தி எடுத்துள்ளாா்.

குடும்பத்தினா் அவரை ஜன.6 ஆம் தேதி, திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த ஆலன்ரெனிஷ், புதன்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இது குறித்து காந்தி மாா்க்கெட் போலீஸாா் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனா்.