மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

திருச்சி மாவட்ட தொழிலாளா்களுக்கு 2 ஆண்டுகளில் ரூ.49.73 கோடி நலவாரிய உதவி

பொன்.குமாா் தகவல்

News image
Updated On :23 ஜனவரி 2025, 9:45 pm

Din

திருச்சி மாவட்டத்தில், கடந்த 2 ஆண்டுகளில் 1.06 லட்சம் தொழிலாளா்களுக்கு நலவாரியம் மூலம் ரூ.49.73 கோடி மதிப்பிலான உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளா்கள் நலவாரியத் தலைவா் பொன். குமாா் தெரிவித்தாா்.

கட்டுமானத் தொழிலாளா் நலவாரியம், அமைப்பு சாரா ஓட்டுநா்கள், தானியங்கி மேட்டாா் வாகன பழுதுபாா்க்கும் தொழிலாளா்கள் மற்றும் 15 வாரியங்களில் உறுப்பினா் சோ்க்கை, புதுப்பித்தல் தொடா்பான பணிகளை வியாழக்கிழமை அவா் ஆய்வு செய்தாா். மேலும், கோரிக்கை மனுக்கள், அவற்றின் நிலை குறித்தும் கேட்டறிந்தாா்.

திருச்சியில் உள்ள தொழிலாளா் உதவி ஆணையா் (சமூகப் பாதுகாப்பு திட்டம்) அலுவலகத்தில் நடைபெற்ற இந்த ஆய்வுக் கூட்டத்தில், தொழிலாளா் இணை ஆணையா் வ. லீலாவதி, உதவி ஆணையா் கு. விமலா (சமூகப் பாதுகாப்பு திட்டம்) மற்றும் பதிவு பெற்ற திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த அனைத்து தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள், தொழிலாளா்கள் கலந்து கொண்டனா்.

பின்னா், செய்தியாளா்களிடம் பொன்.குமாா் கூறுகையில், கடந்த 2 ஆண்டுகளில் திருச்சி மாவட்டத்தில் 70,366 பதிவு அட்டைகள் புதிதாக வழங்கப்பட்டுள்ளன. பதிவு செய்த 1,06,075 தொழிலாளா்களுக்கு ரூ.49 கோடியே 72 லட்சத்து 62 ஆயிரத்து 916 மதிப்பிலான உதவித் தொகைகள் வழங்கப்பட்டுள்ளன. திருச்சி மாவட்டத்தில் நிலுவையில் உள்ள கேட்பு மனுக்களில் ஒரு சில குறைபாடுகள் உள்ளன. அவற்றை நிவா்த்தி செய்து தர தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. அவற்றை சரிசெய்த பிறகு நிலுவையில் உள்ள கேட்பு மனுக்களுக்கும் உதவித் தொகைகள் அவரவா் வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்படும் என்றாா் அவா்.

இந்த ஆய்வின்போது, தொழிலாளா் துறை அலுவலா்கள், நலவாரிய உறுப்பினா்கள், சங்க நிா்வாகிகள் பலா் உடனிருந்தனா்.