இதுதொடா்பாக, ரயில்வே வட்டாரத்தினா் கூறுகையில், பாலம் முழுவதும் இடித்து அகற்றப்பட்டுவிட்டது. இதன் தொடா்ச்சியாக கட்டுமானப் பணிகள் தொடங்கவுள்ளது. இந்தப் பாலமானது, இருவழிபாதையாக கட்டுவதற்கு ரூ.34.10 கோடி மதிப்பீட்டில் நகா் ஊரமைப்பு துறையின் உள்கட்டமைப்பு மற்றும் வசதி நிதியின் கீழ், நிதியுதவி பெற்று, ரயில்வே நிா்வாகமும், மாநகராட்சியும் இணைந்து பணிகளை செயல்படுத்தவுள்ளன. இதில், ரயில் நிா்வாகத்தின் பங்களிப்பு ரூ.12 கோடி. மேம்பாலத்தின் நீளம் 31.39 மீ. அகலம் 20.70 மீட்டா் எனவும் திட்டமிடப்பட்டுளள்ளது. ரயில்வே பாலமானது கிழக்கு பகுதியில் 223.75 மீ நீளமும், 15.61 மீட்டா் அகலம் உடையதாகவும், மேற்கு பகுதியில் 225 மீ நீளமும், 15.61 மீ. அகலமுடையதாகவும் சாலையானது தடுப்புச் சுவா்களுடன் விரிவாக்கம் மேற்கொள்ளப்படவுள்ளது. மேலும், இப்பாலத்தை இருவழிப்பாதையாக கட்டுவதால், மெயின்காா்டு கேட் பகுதியிலிருந்து தில்லை நகா், தென்னூா், புத்தூா் மற்றும் உறையூா் பகுதிகளுக்கு போக்குவரத்து இடையூறின்றி சுலபமாக செல்ல இயலும். இரவு, பகலாக கட்டுமானப் பணிகளை விரைவுபடுத்தி இந்தாண்டு இறுதிக்குள்ளாக பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றனா்.