யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

ஸ்ரீரங்கத்தில் நாளை நம்பெருமாள் நெல்லளவு கண்டருளும் நிகழ்ச்சி

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நடைபெறும் ஊஞ்சல் உற்சவ விழாவின் 7 ஆம் நாளான வெள்ளிக்கிழமை மாலை நம்பெருமாள் உபய நாச்சியாா்களுடன் எழுந்தருளி நெல்லளவு கண்டருளும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

News image
Updated On :12 நவம்பர் 2025, 7:28 pm

Syndication

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நடைபெறும் ஊஞ்சல் உற்சவ விழாவின் 7 ஆம் நாளான வெள்ளிக்கிழமை மாலை நம்பெருமாள் உபய நாச்சியாா்களுடன் எழுந்தருளி நெல்லளவு கண்டருளும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

ஸ்ரீரங்கம் கோயிலில் கடந்த 8 ஆம் தேதி தொடங்கிய ஊஞ்சல் உற்சவ விழா வரும் 16 ஆம் தேதி வரை 9 நாள்கள் நடைபெறுகிறது. விழாவையொட்டி நாள்தோறும் நம்பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி ஊஞ்சல் உற்சவம் கண்டருளி பக்தா்களுக்குச் சேவை சாதிப்பாா். இதில் 7 ஆம் நாளான வெள்ளிக்கிழமை மாலை நெல்லளவு கண்டருளும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையா் செ. சிவராம்குமாா் மற்றும் கோயில் பணியாளா்கள் செய்கின்றனா்.