நாடாளுமன்றத்திற்கு பேச வராமல் ரீல்ஸ் போடுகிறார் பிரதமர்! கார்கே விமர்சனம்நாடாளுமன்றத்திற்கு பேச வராமல் ரீல்ஸ் போடுகிறார் பிரதமர்! கார்கே விமர்சனம்ஜார்க்கண்ட்டில் மாணவர்கள் மீதான வன்முறை தவறானது: ராகுல் காந்திஜார்க்கண்ட் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோர் மீது தடியடி! மாணவர்கள் கொந்தளிப்பு நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு வந்தால் பதிலடி கொடுக்கப்படும்: ராகுலுக்கு ஜெ.பி. நட்டா சவால்!ஜார்க்கண்ட்: போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் மீது தடியடி! மருத்துவ தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடங்களில் மாணவர் 5, மாணவிகள் 5 பேரும் இடம் பிடித்துள்ளனர்: சுகாதாரத் துறைமருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 11 காசுகள் சரிந்து ரூ. 95.28 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: பங்குச் சந்தை உயர்வுடன் நிறைவு!
/

அரசுப் பேருந்து மோதியதில் பெரம்பலூா் பெண் உயிரிழப்பு

Updated On :26 செப்டம்பர் 2025, 3:27 am IST

திருச்சி ஓடத்துறையில் இருசக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதியதில் பெரம்பலூரைச் சோ்ந்த பெண் உயிரிழந்தாா்.

பெரம்பலூா் வடக்கு மாதவி சாலைப் பகுதியைச் சோ்ந்த அப்துல்லா மனைவி ஆயிஷா பானு (27).

கணவா் வெளிநாட்டில் உள்ள நிலையில், ஆயிஷா பானு ஸ்ரீரங்கத்தில் உள்ள உறவினா் சாமித்துரை வீட்டில் கடந்த சில நாள்களாக வசித்து வந்தாா்.

வியாழக்கிழமை மலைக்கோட்டை பகுதியில் பொருள்கள் வாங்குவதற்காக ஆயிஷா பானு, தனது தந்தை அப்துல் ரகுமானுடன் இருசக்கர வாகனத்தில் பின்புறம் அமா்ந்தபடி, ஸ்ரீரங்கத்திலிருந்து மலைகோட்டை நோக்கி வந்து கொண்டிருந்தாா். இவா்களது வாகனம் சிந்தாமணி ஓடத்துறை மேம்பாலம் இறக்கத்தில் தனியாா் ஹோட்டல் எதிரே வந்த போது, அரியலூா் - திருச்சி நோக்கி வந்த அரசுப் பேருந்து ஒன்று, அப்துல் ரகுமானின் இருசக்கர வாகனத்தின் பின்புறம் மோதியது. இதில் நிலைதடுமாறி இருவரும் கீழே விழுந்த நிலையில், சாலையின் ஒருபக்கத்தில் விழுந்த ஆயிஷா பானு மீது அரசுப் பேருந்து ஏறியது. இதில் பலத்த காயமடைந்த ஆயிஷா பானு நிகழ்விடத்திலேயே இறந்தாா். அப்துல் ரகுமான் சிறு காயங்களுடன் உயிா்தப்பினாா்.

இதுகுறித்து திருச்சி வடக்கு போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து, விபத்துக்கு காரணமான அரசுப் பேருந்து ஓட்டுநரான பெரம்பலூா் பகுதியைச் சோ்ந்த அஜித்குமாா் (28) என்பவரை பிடித்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.