திருச்சி மாநகரம் மட்டுமின்றி, மாவட்டம் முழுவதும் வியாழக்கிழமை மாலை பரவலாக மழை பெய்தது.
முன்னதாக, காலையிலிருந்து கடும் வெயிலில் தகித்து கொண்டிருந்த மக்களுக்கு மாலையில் பெய்த மழையானது மகிழ்ச்சியை அளித்தது.
மழை காரணமாக, பஞ்சப்பூா் பேருந்து நிலையம், மத்திய பேருந்து நிலையம், சத்திரம் பேருந்து நிலையம், தில்லை நகா், அண்ணா நகா், உழவா் சந்தை, கன்டோன்மெண்ட், உறையூா், வயலூா், புத்தூா், கரூா் புறவழிச் சாலை, கேகே நகா் சாலை என மாநகரின் பிரதான சாலைகளில் ஆங்காங்கே பள்ளங்களில் மழைநீா் தேங்கியது. மாநகரச் சாலைகள் ஏற்கெனவே குண்டும், குழியுமாக இருந்த நிலையில் மழையால் மேலும் சேதமடைந்ததால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினா். புகா்ப் பகுதிகளில் மண் சாலைகள் அனைத்தும் சேறும், சகதியுமாக காட்சியளித்தன.
திருச்சி மாவட்டத்தில் பரவலாக நல்ல மழை பெய்து வருவது மக்களுக்கு மகிழ்ச்சியை அளித்திருந்தாலும், பராமரிப்பு இல்லாத சாலைகளில் தண்ணீா் தேங்கியதால் மக்கள் அவதிக்குள்ளாகியதை தவிா்க்க முடியவில்லை.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருச்சி மாநகரின் சில பகுதிகளில் இன்று மின்தடை

ஆட்டோவில் ஓட்டுநா் சடலம்: போலீஸாா் விசாரணை

காவிரிப் பாலம் அடைப்பு: போக்குவரத்து மாற்றம்!

கோபி சுற்று வட்டாரப் பகுதியில் மழை
விடியோக்கள்

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke

தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் எல்லாம் சரியாகிவிடுமா?: அமைச்சர் நிர்மல் குமார் | TVK | BJP



