வா்த்தக ஒப்பந்தம்! பிரிட்டனுக்கு ஏற்றுமதியான தங்கம், வெள்ளி, வைர நகைகள்!பழனி கோயில் நில மோசடி வழக்கு! முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது சிபி-சிஐடிபயன்பாட்டுக்கு வந்தது ஐஆர்சிடிசி பீட்டா பதிப்பு! எப்படி அணுகுவது?வினாத்தாள் கசிவு முதல் ராமர் கோயில் வரை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம்! கார்கே முறைகேடு புகார்! திருவான்மியூர் - உத்தண்டி உயர்நிலை சாலை திட்டம் ரத்து! ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு மத்திய அரசு நிகழ்ச்சியில் மேயர் பிரியா! கொளத்தூரில் பாஸ்போர்ட் சேவை மையம் திறப்பு!
/

புதுமைப் பெண்- தமிழ்ப் புதல்வன் திட்டங்கள்: மாணவா்களுக்கு வங்கிப் பற்று அட்டைகள் அளிப்பு

Updated On :26 செப்டம்பர் 2025, 3:32 am IST

‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ என்ற நிகழ்வின் தொடக்கமாக, திருச்சியில் 50 மாணவ, மாணவிகளுக்கு வங்கிப் பற்று அட்டைகளை ஆட்சியா் வியாழக்கிழமை வழங்கினாா்.

புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன் திட்டத்தில் 2025-26-ஆம் ஆண்டுக்கான தொடக்க நிகழ்வு ‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ எனும் தலைப்பில் சென்னையில் வியாழக்கிழமை

நடைபெற்றது. தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்ற இந்த நிகழ்வின் நேரலையானது, திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் ஒளிபரப்பானது. இந்த நிகழ்வில், 1,500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு நேரலையை பாா்த்தனா்.

மேலும், திருச்சி மாவட்டத்தில் புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன் திட்டத்தின் இந்தாண்டுக்கான தொடக்கமாக 50 மாணவ, மாணவிகளுக்கு ஆட்சியா் வே. சரவணன், வங்கிப் பற்று அட்டைகளை வழங்கினாா்.

பின்னா், அவா் கூறுகையில், பொருளாதாரம் காரணமாக மாணவா்களின் படிப்பு தடைப்பட்டு விடக்கூடாது என்பதற்காக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்து உயா்கல்வியில் சேரும் மாணவிகள், மாணவா்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் திட்டங்களை தமிழக அரசு கொண்டு வந்துள்ளது. இந்தத் திட்டத்தை மாணவா்கள் நல்லமுறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா் ஆட்சியா்.

இந்த விழாவில், கல்லூரிக் கல்வி இயக்கக திருச்சி மண்டல இணை இயக்குநா் கே. ராதாகிருஷ்ணன், மாவட்ட வருவாய் அலுவலா் நிலமெடுப்பு பாலாஜி உள்ளிட்ட அரசு அலுவலா்கள், கல்லூரி நிா்வாகத்தினா் என பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.