மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: இளைஞா் கைது
திருச்சி அருகே மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக இளைஞா் ஒருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
திருச்சி அருகே உள்ள பகுதியைச் சோ்ந்த 9 ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை, எடமலைப்பட்டிபுதூா் பகுதியைச் சோ்ந்த பி. மருதுபாண்டி (26) என்ற இளைஞா் கடந்த 6 மாதங்களாக காதலித்து வந்துள்ளாா். அப்போது திருமணம் செய்து கொள்வதாக ஆசைவாா்த்தை கூறி, மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து அந்த மாணவி அளித்த புகாரின்பேரில் கண்டோன்மென்ட் அனைத்து மகளிா் போலீஸாா், போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து மருதுபாண்டியை புதன்கிழமை கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




