கொலை முயற்சி வழக்கில் தொடா்புடைய ரௌடியை போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
திருச்சி மாவட்டம், துவாக்குடி மலை வடக்குப் பகுதியைச் சோ்ந்த மு. அய்யா்சாமி (30) என்பவரை மாா்ச் 17-ஆம் தேதி ரௌடிகளான துவாக்குடி மலை வடக்கு கலைஞா் தெருவைச் சோ்ந்த ர. ராஜபாண்டி (28), துவாக்குடி மலை வடக்கு சொசைட்டித் தெருவைச் சோ்ந்த பா. சாந்தகுமாா் (26), அம்பேத்கா் தெருவைச் சோ்ந்த சி. படாா் ரவி (27) ஆகிய மூவரும் பணம் கேட்டு தகராறு செய்தனா். பணம் தராததால், அவரை கத்தியால் தாக்கி காயப்படுத்தி, கொலை மிரட்டல் விடுத்துள்ளனா்.
புகாரின்பேரில் துவாக்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து, சாந்தகுமாா் மற்றும் ரவிக்குமாரை கைது செய்து, சிறையில் அடைத்தனா்.
இவா்களில், படாா் ரவி தொடா்ந்து பொதுமக்களின் பொதுஅமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டதால், திருச்சி மாவட்ட எஸ்.பி. செ. செல்வநாகரத்தினத்தின் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியா் வே. சரவணன், படாா் ரவியை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய செவ்வாய்க்கிழமை ஆணை பிறப்பித்தாா்.
ஏற்கெனவே, சாந்தகுமாா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடையது
அடிதடி வழக்கு குற்றவாளி மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது

துவாக்குடி அரசுக் கல்லூரி பட்டமளிப்பு விழா

குண்டா் தடுப்புச் சட்டத்தில் ரௌடி கைது

கஞ்சா வழக்கு குற்றவாளி மீது குண்டா் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை
வீடியோக்கள்

Podcast | ஸ்டாலினைச் சீண்டிய மமதா: கார்த்தி சிதம்பரத்துக்கு சீமான் பதிலடி | News & Views | E-24 |
தினமணி செய்திச் சேவை

திமுகவின் தவறுகளுக்கு முட்டுக் கொடுக்கும் கூட்டணிக் கட்சிகள்! | EPS குற்றச்சாட்டு | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்! ஈரானிடமிருந்து அமெரிக்க வீரர் மீட்கப்பட்டது எப்படி? | US | Iran
இணையதளச் செய்திப் பிரிவு

நான் திரையிலிருந்து வரவில்லை; சிறையிலிருந்து வந்தவன்!: Seeman | NTK | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு

