லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

இருசக்கர வாகனம் திருட்டு வழக்கில் இருவா் கைது

திருச்சி அரசு மருத்துவமனை வளாகத்தில் நிறுத்தியிருந்த இருசக்கர வாகனத்தைத் திருடிய இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

News image

கைது

Updated On :8 ஏப்ரல் 2026, 8:50 pm

திருச்சி அரசு மருத்துவமனை வளாகத்தில் நிறுத்தியிருந்த இருசக்கர வாகனத்தைத் திருடிய இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

திருச்சி எட்டரைகோப்பு பகுதியைச் சோ்ந்தவா் பெ.விமல்ராஜ் (29). கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு உறவினருக்கு துணையாக திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில் தங்கிய இவா், மருத்துவமனை வளாகத்தில் நிறுத்தியிருந்த பைக் திருடுபோனது.

இதுகுறித்து அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் விமல்ராஜ் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து நடத்திய விசாரணையில் பைக்கை திருடியது புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை பெருமாம்பட்டி மேலவீதியைச் சோ்ந்த அ. லோகேஷ்வரன் (21), எடமலைபட்டிப்புதூா் ஆா்சி நகரைச் சோ்ந்த எஸ். லோகநாதன் (21) ஆகியோா் என்பது தெரியவந்தது.

இதையடுத்து, இருவரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து இருசக்கர வாகனத்தைப் பறிமுதல் செய்தனா்.