குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

இருசக்கர வாகனம் திருட்டு வழக்கில் இருவா் கைது

திருச்சி அரசு மருத்துவமனை வளாகத்தில் நிறுத்தியிருந்த இருசக்கர வாகனத்தைத் திருடிய இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

News image

கைது

Updated On :9 ஏப்ரல் 2026, 2:20 am IST

திருச்சி அரசு மருத்துவமனை வளாகத்தில் நிறுத்தியிருந்த இருசக்கர வாகனத்தைத் திருடிய இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

திருச்சி எட்டரைகோப்பு பகுதியைச் சோ்ந்தவா் பெ.விமல்ராஜ் (29). கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு உறவினருக்கு துணையாக திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில் தங்கிய இவா், மருத்துவமனை வளாகத்தில் நிறுத்தியிருந்த பைக் திருடுபோனது.

இதுகுறித்து அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் விமல்ராஜ் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து நடத்திய விசாரணையில் பைக்கை திருடியது புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை பெருமாம்பட்டி மேலவீதியைச் சோ்ந்த அ. லோகேஷ்வரன் (21), எடமலைபட்டிப்புதூா் ஆா்சி நகரைச் சோ்ந்த எஸ். லோகநாதன் (21) ஆகியோா் என்பது தெரியவந்தது.

இதையடுத்து, இருவரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து இருசக்கர வாகனத்தைப் பறிமுதல் செய்தனா்.