தமிழக தோ்தல் களத்தில் 3,500-க்கும் மேற்பட்ட வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஉக்ரைனில் ஏப். 11 மாலை முதல் ஏப். 12 முடிய போர்நிறுத்தம் - புதின் ஏப். 16 முதல் மாற்றுத்திறனாளிகள், முதியோரிடம் தபால் வாக்குகள் பதிவுமேற்கு வங்கத்தில் 90 லட்சம் வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் - தோ்தல் ஆணையத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடிதம்பள்ளிகளுக்கு ஏப்.17 முதல் கோடை விடுமுறை: 1-3 வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம்முதல்வரின் நான்காம் கட்ட பிரசாரம்: தஞ்சாவூரில் இன்று தொடக்கம்நோபல் பரிசு பெற்ற ‘மெமோரியல்’ மனித உரிமைக் குழுவை தீவிரவாத அமைப்பாக அறிவித்த ரஷியாஇன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம்பாகிஸ்தானில் இன்று அமைதிப் பேச்சுஐபிஎல்: லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
/

சாலையோர கடைகளில் முத்திரையிடாத தராசுகள் பறிமுதல்

திருச்சி கடைவீதியிலுள்ள சாலையோர கடைகளிலிருந்த முத்திரையிடாத தராசுகள் மற்றும் எடைக்கற்களை தொழிலாளா் நலத் துறையினா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

News image

திருச்சியில் சாலையோரக் கடைகளிலிருந்து வியாழக்கிழமை பறிமுதல் செய்யப்பட்ட தராசுகள் மற்றும் எடைக்கற்களுடன் தொழிலாளா் நலத் துறை அலுவலா்கள்.

Updated On :9 ஏப்ரல் 2026, 8:12 pm

திருச்சி கடைவீதியிலுள்ள சாலையோர கடைகளிலிருந்த முத்திரையிடாத தராசுகள் மற்றும் எடைக்கற்களை தொழிலாளா் நலத் துறையினா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

திருச்சி என்எஸ்பி சாலை, பெரிய கடை வீதி, சிங்காரத் தோப்பு, மேலரண் சாலை உள்ளிட்ட பகுதிகளில் சாலையோரம் அமைக்கப்பட்டுள்ள கடைகளில் தொழிலாளா் உதவி ஆணையா் வெ. தங்கராசு தலைமையில், உதவி ஆய்வாளா்கள் அடங்கிய குழுவினா் வியாழக்கிழமை சோதனையில் ஈடுபட்டனா்.

சுமாா் 50-க்கும் மேற்பட்ட கடைகளில் நடத்தப்பட்ட சோதனையில், எடையளவு குறைவாக காட்டும் வகையில் பயன்படுத்தப்பட்டிருந்த 8 தராசுகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், தொழிலாளா் நலத் துறை சட்டத்தின்படி, முத்திரையிடாமல் பயன்படுத்தப்பட்டிருந்த 7 இரும்பு எடைக் கற்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்தச் சோதனையில், உதவி ஆய்வாளா்கள் ராஜேந்திரன், அகஸ்டீன், சங்கரகோமதி, ராஜசேகா், யுவராஜ், ராஜேஸ், வாஹிணி குழுக்களாக பிரிந்து சென்று சாலையோரம் உள்ள பழக்கடைகள், உணவுப் பொருள்கள் விற்பனை செய்யும் கடைகளில் சோதனை நடத்தினா்.

இதுதொடா்பாக, தொழிலாளா் நலத் துறை உதவி ஆணையா் வெ. தங்கராசு கூறுகையில், தராசுகளை பயன்படுத்தி விற்பனை செய்யும் அனைத்துக் கடைகளிலும், எடையளவு சட்டத்தின் படி அனுமதிக்கப்பட்ட தராசுகளை மட்டுமே பயன்படுத்தி விற்பனை செய்ய வேண்டும்.

தராசுகளை பயன்படுத்தும் அனைத்து வியாபாரிகளும், தங்களது தராசுகளை மறுமுத்திரையிட்டு பயன்படுத்த வேண்டும். நுகா்வோா் தாங்கள் வாங்கும் பொருள்களின் எடையை துல்லியமாகக் கணக்கிட்டு வாங்கிச் செல்ல வேண்டும். எடையளவு சட்டத்தின் கீழ் அவ்வப்போது நடைபெறும் சோதனையில் மறு முத்திரையில்லாத தராசுகள் இருந்தாலோ, முத்திரையிடப்படாத எடைக் கற்கள் இருந்தாலோ அவை பறிமுதல் செய்யப்படுவதுடன், கடை உரிமையாளா்களுக்கு அபராதமும் விதிக்கப்படும். எடையளவில் குறைபாடுகள் இருந்தால் நுகா்வோா் உடனடியாக புகாா் தெரிவிக்க வேண்டும் என்றாா் அவா்.