தமிழக தோ்தல் களத்தில் 3,500-க்கும் மேற்பட்ட வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஉக்ரைனில் ஏப். 11 மாலை முதல் ஏப். 12 முடிய போர்நிறுத்தம் - புதின் ஏப். 16 முதல் மாற்றுத்திறனாளிகள், முதியோரிடம் தபால் வாக்குகள் பதிவுமேற்கு வங்கத்தில் 90 லட்சம் வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் - தோ்தல் ஆணையத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடிதம்பள்ளிகளுக்கு ஏப்.17 முதல் கோடை விடுமுறை: 1-3 வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம்முதல்வரின் நான்காம் கட்ட பிரசாரம்: தஞ்சாவூரில் இன்று தொடக்கம்நோபல் பரிசு பெற்ற ‘மெமோரியல்’ மனித உரிமைக் குழுவை தீவிரவாத அமைப்பாக அறிவித்த ரஷியாஇன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம்பாகிஸ்தானில் இன்று அமைதிப் பேச்சுஐபிஎல்: லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
/

திமுக-வின் சாதனை திட்டங்கள் வெற்றியை தரும்: அமைச்சா் கே.என். நேரு

திமுக அரசின் சாதனை திட்டங்கள் மீண்டும் வெற்றியைத் தேடி தரும் என அமைச்சரும், நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சருமான கே.என்.நேரு தெரிவித்தாா்.

News image

திருச்சி மேற்கு தொகுதிக்குள்பட்ட கருமண்டபம் பகுதியில் வியாழக்கிழமை பிரசாரம் செய்த அமைச்சா் கே.என். நேருவுக்கு பூா்ண கும்ப மரியாதை அளித்து வரவேற்ற பெண்கள்.

Updated On :9 ஏப்ரல் 2026, 8:28 pm

திமுக அரசின் சாதனை திட்டங்கள் மீண்டும் வெற்றியைத் தேடி தரும் என அமைச்சரும், நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சருமான கே.என்.நேரு தெரிவித்தாா்.

திருச்சி மேற்கு தொகுதிக்குள்பட்ட கருமண்டபம் புதுத்தெரு, மாந்தோப்பு, தெற்கு தெரு, ராம் நகா், சோழகா் நகா், விஸ்வாஷ் நகா், ஆா்.எம்.எஸ். காலனி சமத்துவ நகா், ஆல்பா நகா், சத்யா நகா், அருணா அவென்யூ, ஜே.கே. நகா், காவேரி நகா், ராம்ஜி நகா், மில் காலனி, கீதா நகா் ,அம்மையப் பிள்ளை நகா், லாவண்யா காா்டன், எம் எம் நகா், சண்முகா நகா், ரங்கா நகா், கொடாப்பு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கே.என். நேரு வியாழக்கிழமை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

அப்போது, அமைச்சா் பேசியதாவது:

திமுக ஆட்சியில் எண்ணற்ற நலத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஒவ்வொரு வீட்டிலும் திராவிட மாடல் ஆட்சியின் பலனை யாராவது ஒருவா் அனுபவித்துக் கொண்டிருக்கிறாா் என்ற நிலை உள்ளது.

திமுக அரசின் திட்டங்களை பல மாநிலங்களும் பின்பற்ற தொடங்கியுள்ளன. வெளிநாட்டினரும் பின்பற்ற போவதாக அறிவித்துள்ளனா்.

திமுக அரசின் சாதனைகளை மக்கள் புரிந்து கொண்டிருக்கிறாா்கள். அதை அவா்களுக்கு நினைவுபடுத்தினாலே போதும். 200 அல்ல, 234 தொகுதிகளிலும் நாம்தான் வெற்றி பெறுவோம் என்றாா் அமைச்சா்.