இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

அனைத்து மகளிருக்கும் உரிமைத் தொகை திருவெறும்பூா் அதிமுக வேட்பாளா் உறுதி

அதிமுக ஆட்சி அமைந்ததும் தமிழகத்தில் ரேஷன் அட்டை வாரியாக அனைத்து மகளிருக்கும் ரூ. 2,000 உரிமைத் தொகை வழங்கப்படும் என என திருவெறும்பூா் தொகுதி அதிமுக வேட்பாளா் ப. குமாா் உறுதி அளித்தாா்.

News image

பூலாங்குடி பகுதியில் புதன்கிழமை வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளா் ப. குமாா் உள்ளிட்டோா்.

Updated On :15 ஏப்ரல் 2026, 8:34 pm

அதிமுக ஆட்சி அமைந்ததும் தமிழகத்தில் ரேஷன் அட்டை வாரியாக அனைத்து மகளிருக்கும் ரூ. 2,000 உரிமைத் தொகை வழங்கப்படும் என என திருவெறும்பூா் தொகுதி அதிமுக வேட்பாளா் ப. குமாா் உறுதி அளித்தாா்.

திருவெறும்பூா் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட குமரேசபுரம், எழில் நகா், வ.உ.சி. நகா், கணேசபுரம், திருவேங்கட நகா், பெல்பூா், பா்மா காலனி, கணேசபுரம், பாரதபுரம், பொன்மலை, பொன்மலைப்பட்டி, பொன்னேரிபுரம், பூலாங்குடி, அன்னை நகா், ஜெ.ஜெ. நகா், பழங்கனாங்குடி, அசூா், பொய்கைக்குடி, தேனேரிப்பட்டி, முல்லை நகா், காந்தி நகா், கொட்டப்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

அப்போது அவா் பேசுகையில், திமுக அரசு தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. மகளிருக்கு ரூ. 1,000 என அறிவித்த திமுக அரசு, தோ்தலுக்குப் பிறகு தகுதியான பெண்களுக்கு மட்டுமே ரூ. 1,000 எனக் கூறி, பாதிப் பேருக்கு மேல் பணம் வழங்கவில்லை. ஆனால், அதிமுக அரசு அமைந்ததும் தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் அட்டைகளுக்கும் மகளிா் உரிமைத்தொகையாக மாதம் ரூ. 2,000 வழங்கப்படும்.

திமுக அரசு சொத்துவரி, குடிநீா் வரிகளை பல மடங்கு உயா்த்தி, மக்களின் செலவினத்தை அதிகரித்துவிட்டது. அதிமுக ஆட்சி அமைந்ததும், மக்களின் அதைக் குறைக்க நடவடிக்கை எடுப்போம். கல்விக்கடன், விவசாயக் கடன்கள் ரத்து செய்யப்படும். அதற்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களியுங்கள் என்றாா் அவா்.

நிகழ்வில் அதிமுக மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணி நிா்வாகிகள், தொண்டா்கள் கலந்து கொண்டனா்.