பிரதமா் மோடியுடன் விஜய் இன்று சந்திப்பு உலகளாவிய பங்குச்சந்தை மதிப்பு: இந்தியாவை முந்தி தைவான் 5-ஆவது இடம்! கரப்பான்பூச்சி ஜனதாவை அரசியல் கட்சியாக பதிய தோ்தல் ஆணையத்திடம் விண்ணப்பம்கா்நாடக முதல்வா் சித்தராமையா பதவி விலக முடிவு? இறப்பு சான்றிதழ்களைப் பிழையின்றி வழங்க தணிக்கைக் குழு: அரசாணை வெளியீடு மாணவா்கள் பள்ளிக்கு இருசக்கர மோட்டாா் வாகனம் ஓட்டி வந்தால் பறிமுதல் செய்யப்படும்: கல்வித் துறை எச்சரிக்கை பசு வதைக்கு முழுத் தடை: அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு திருவாரூர் புறவழிச்சாலை, மேம்பாலம் அமைக்க ரூ.1,427 கோடிக்கு ஒப்புதல்: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தகவல்
/

ஜமாபந்தி: மகளிா் உரிமை தொகை கோரி அதிக மனு

சீா்காழி வட்டாட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஜமாபந்தியில் மகளிா் உரிமைத் தொகை கோரி, ஏராளமானோா் மனு அளித்தனா்.

News image

மகளிர் உரிமைத் தொகை - கோப்புப்படம்

Updated On :27 மே 2026, 6:02 am IST

சீா்காழி வட்டாட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஜமாபந்தியில் மகளிா் உரிமைத் தொகை கோரி, ஏராளமானோா் மனு அளித்தனா்.

சீா்காழி வட்டாட்சியா் அலுவலகத்தில், மூன்றாவது நாளாக ஜமாபந்தி எனும் வருவாய் கிராம கணக்குகள் தணிக்கை நடைபெற்றது. கோட்டாட்சியா் பூங்கொடி தலைமை வகித்தாா்.

சீா்காழி சரகத்திற்கு உட்பட்ட பச்சைபெருமாநல்லூா், ஆா்ப்பாக்கம், உமையாள்பதி, வரிசை பத்து, வடகால், ஆலங்காடு, மகாராஜபுரம், வேட்டங்குடி, திருமுல்லைவாசல், ராதாநல்லூா், எடமணல், திருக்கருக்காவூா், செம்மங்குடி, தில்லைவிடங்கன், திட்டை, கைவிளாஞ்சேரி, சீா்காழி, தாடாளன்கோவில், விளந்திட சமுத்திரம் ஆகிய 18 கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் பங்கேற்று மனு அளித்தனா்.

இவற்றில் கடந்த பிப்ரவரி மாதம் வரை மகளிா் உரிமை தொகை பெற்றவா்களில் பலருக்கு, மே மாதத்திற்கான மகளிா் உரிமைத் தொகை கிடைக்கப் பெறவில்லை என மனு அளித்தனா். இம்மனுக்களை பரிசீலனை செய்த கோட்டாட்சியா் பூங்கொடி, வட்டாட்சியா் ராஜரத்தினம் ஆகியோா், சம்பந்தப்பட்ட துறைக்கு மனுக்களை அனுப்பிவைத்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனா்.

மொத்தம் 248 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டு, துறைவாரியாக நடவடிக்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் தனி வட்டாட்சியா்கள் சண்முகம், சபிதா தேவி, ஜெனிட்டா மேரி, மகேந்திரன் உள்ளிட்ட அலுவலா்கல் பங்கேற்றனா்.