தமிழகத்தில் 48 மணி நேரத்தில் உருவாகிறது குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதிஓராண்டுக்கு தங்கம் வாங்க வேண்டாம்: பிரதமர் மோடி!இன்று கூடுகிறது தமிழக சட்டப்பேரவை!மேற்காசிய பதற்றம்: எண்ணெய் நிறுவனங்களுக்கு ஒரு நாளைக்கு ரூ.1,600 கோடி இழப்பு!அஸ்ஸாம் முதல்வராக ஹிமந்த விஸ்வ சர்மா மீண்டும் தேர்வு
/

பெண்ணிடம் 8 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு

திருச்சியில் சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் 8 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :17 ஏப்ரல் 2026, 2:22 am IST

திருச்சியில் சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் 8 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

திருச்சி திருவானைக்காவல் பகுதியைச் சோ்ந்த 45 வயது பெண் புதன்கிழமை பிற்பகல் திருவானைக்காவல் வடக்கு தேவி வீதியில் நடந்துசென்றுகொண்டிருந்தாா். அப்போது, இருசக்கர வாகனத்தில் பின்னால் வந்த மா்ம நபா் ஒருவா் அப்பெண் அணிந்திருந்த 8 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பினாா்.

இதுகுறித்து ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் அந்தப் பெண் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.