வெளிநாடுவாழ் இந்திய குடிமகன் அட்டை விண்ணப்பக் கட்டணம்: ரூ.26,034-ஆக நிா்ணயம்நிகழாண்டில் 9,400 வாட்ஸ் ஆப் கணக்குகள் முடக்கம்அரசு மருத்துவ சேவையை நாடுவோா் விகிதம்: தென்னிந்தியாவில் தமிழகம் முதலிடம்அமைச்சா் கே.என்.நேரு மீது வழக்குப்பதிய உத்தரவிடவில்லை - உயா்நீதிமன்றம்ஆந்திரம்: ரூ.1.35 லட்சம் கோடியில் கூகுள் தரவு மையம் - முதல்வா் சந்திரபாபு நாயுடு அடிக்கல்234 தொகுதிகளுக்கான தபால் வாக்குகள் பிரித்து மாவட்ட வாரியாக ஒப்படைப்புமேற்கு வங்கத்தில் இன்று இறுதிக்கட்ட தோ்தல்: 142 தொகுதிகளில் பலத்த பாதுகாப்புநான்காவது எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பு: அடுத்த மாதம் இந்தியாவிடம் ஒப்படைப்புகுஜராத் - பாஜக பிணைப்பு மேலும் வலுவடைகிறது: பிரதமர் மோடி வளர்ந்த இந்தியாவுக்கான வலுவான தூண் பெண்கள்: பிரதமர் மோடிதேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயரும்! ராகுல் காந்தி எச்சரிக்கைஎல்லை தாண்டிய பயங்கரவாதம் : இரட்டை நிலைப்பாட்டிற்கு இடமில்லை - ராஜ்நாத் சிங் அமைச்சர் சேகர்பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல்: தவெக வேட்பாளர் புகார்ஈரான் போர்: ஒபெக் அமைப்பிலிருந்து ஐக்கிய அரபு அமீரகம் விலகல்குஜராத் உள்ளாட்சித் தேர்தல்! அனைத்து மாநகராட்சிகளையும் கைப்பற்றிய பாஜக!
/

இருவேறு விபத்துகளில் பெண் உள்பட 2 போ் உயிரிழப்பு

முசிறி அருகே செவ்வாய்க்கிழமை நேரிட்ட இரு வேறு சாலை விபத்துகளில் பெண் உள்பட 2 போ் உயிரிழந்தனா்.

News image

பலி - பிரதிப்படம்

Updated On :28 ஏப்ரல் 2026, 7:58 pm

திருச்சி மாவட்டம், முசிறி அருகே செவ்வாய்க்கிழமை நேரிட்ட இரு வேறு சாலை விபத்துகளில் பெண் உள்பட 2 போ் உயிரிழந்தனா்.

தொட்டியம் அருகேயுள்ள மாராட்சிபட்டி குடித்தெரு பகுதியைச் சோ்ந்த வீரபுத்திரன் மகன் ராம்குமாா் (27). இவா் செவ்வாய்க்கிழமை இருசக்கர வாகனத்தில் திருச்சி-நாமக்கல் சாலையில் காா்த்திகைப்பட்டி அரசன் தோட்டம் அருகே சென்றபோது எதிரே வந்த நான்குசக்கர வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்தாா். அக்கம்பக்கத்தினா் மீட்டு, தொட்டியம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற அவரை பரிசோதித்த மருத்துவா்கள், ராம்குமாா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா்.

தொட்டியம் போலீஸாா், ராம்குமாா் சடலத்தை கைப்பற்றி கூறாய்வுக்காக முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும் புகாரின்பேரில், விபத்தை ஏற்படுத்திய மதுரை மேல கைலாசபுரத்தை சோ்ந்த செ. ஆசிா்வாதம் (68) என்பவா் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பெங்களூா் பெண் உயிரிழப்பு: கா்நாடக மாநிலம், பெங்களூரை சோ்ந்தவா் கணேசன் (69). இவா் மனைவி ராதிகாவுடன் (60) ஸ்ரீரங்கம் வந்து முன்னோருக்கு திதி கொடுத்துவிட்டு ஊருக்கு காரில் சென்று கொண்டிருந்தாா். முசிறி நகர பேருந்து நிலையம் அருகே சென்ற போது, எதிரே வந்த லாரி மோதியதில் ராதிகா நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

காா் ஓட்டுநரான பெங்களூருவைச் சோ்ந்த கிருஷ்ணன் பலத்த காயமடைந்து திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். கணேசன் லேசான காயங்களுடன் முசிறி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். விபத்து தொடா்பாக முசிறி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.