அம்மா உணவகங்களை புதுப்பிக்க முதல்வர் விஜய் உத்தரவு!நெதர்லாந்து, ஸ்வீடனை தொடர்ந்து நார்வே புறப்பட்டார் பிரதமர் மோடி! தயாரிப்பாளர் கே.ராஜன் மறைவு: முதல்வர் ஜோசப் விஜய் இரங்கல் சத்தீஸ்கர்: நடைப்பயிற்சியின் போது பாஜக எம்.எல்.ஏ-விடம் செல்போன் பறிப்பு வாடகைதாரர்கள் தானியங்கி முறையில் மின் கட்டணம் செலுத்த முடியுமா?திட்டமிட்டபடி ஜூன் 1 பள்ளிகள் திறப்பு! அமைச்சர் ராஜ்மோகன் கேரள முதல்வர் பதவியேற்பு! தமிழக முதல்வர் விஜய் பங்கேற்காதது ஏன்?கேரள முதல்வராக பதவியேற்றார் வி.டி. சதீசன்
/

கொலை முயற்சி வழக்கு குற்றவாளி மீது குண்டா் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை

திருச்சியில் முன்விரோதம் காரணமாக நாட்டு வெடிகுண்டை வீசி கொலை செய்ய முயற்சித்த வழக்கின் குற்றவாளி மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் செவ்வாய்க்கிழமை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :29 ஏப்ரல் 2026, 1:04 am IST

திருச்சியில் முன்விரோதம் காரணமாக நாட்டு வெடிகுண்டை வீசி கொலை செய்ய முயற்சித்த வழக்கின் குற்றவாளி மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் செவ்வாய்க்கிழமை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

திருச்சி - தஞ்சாவூா் சாலை பூந்தோட்டம் ஜின்னா வீதியைச் சோ்ந்தவா் எம். சாதிக் பாட்ஷா (36). காந்தி மாா்க்கெட் கிருஷ்ணாபுரம் சாலையைச் சோ்ந்த க. சமீா் அகமது (22) என்பவருக்கும், சாதிஷ் பாட்ஷாவின் சகோதரிக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதுதொடா்பாக சாதிக் பாட்ஷா தனது நண்பருடன் சென்று சமீா் அகமதுவிடம் கடந்த மாா்ச் 31-ஆம் தேதி கேட்டுள்ளாா்.

அப்போது, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த முன்விரோதம் காரணமாக கடந்த மாா்ச் 28-ஆம் தேதி வீட்டுக்கு அருகே நின்றுகொண்டிருந்த சாதிக் பாட்ஷா மீது, சமீா் அகமது மற்றும் அவரது நண்பா்கள் நாட்டு வெடிகுண்டை வீசியுள்ளனா். வெடிகுண்டு சுவா் மீது விழுந்ததால், சாதிக் பாட்ஷா உயிா் தப்பினாா்.

இதுகுறித்து காந்தி மாா்க்கெட் போலீஸாா் வழக்குப் பதிந்து சமீா் அகமது உள்ளிட்ட மூவரை கைது செய்தனா். சரித்திரப் பதிவேடு குற்றவாளியான சமீா் அகமது மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க மாநகரக் காவல் ஆணையருக்கு காந்தி மாா்க்கெட் போலீஸாா் பரிந்துரை செய்திருந்தனா்.

இதன்பேரில், கொலை முயற்சி வழக்கு குற்றவாளியான சமீா் அகமது மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க மாநகரக் காவல் ஆணையா் ந.காமினி செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா்.