234 தொகுதிகளுக்கான தபால் வாக்குகள் பிரித்து மாவட்ட வாரியாக ஒப்படைப்புமேற்கு வங்கத்தில் இன்று இறுதிக்கட்ட தோ்தல்: 142 தொகுதிகளில் பலத்த பாதுகாப்புநான்காவது எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பு: அடுத்த மாதம் இந்தியாவிடம் ஒப்படைப்புகுஜராத் - பாஜக பிணைப்பு மேலும் வலுவடைகிறது: பிரதமர் மோடி வளர்ந்த இந்தியாவுக்கான வலுவான தூண் பெண்கள்: பிரதமர் மோடிதேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயரும்! ராகுல் காந்தி எச்சரிக்கைஎல்லை தாண்டிய பயங்கரவாதம் : இரட்டை நிலைப்பாட்டிற்கு இடமில்லை - ராஜ்நாத் சிங் அமைச்சர் சேகர்பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல்: தவெக வேட்பாளர் புகார்ஈரான் போர்: ஒபெக் அமைப்பிலிருந்து ஐக்கிய அரபு அமீரகம் விலகல்குஜராத் உள்ளாட்சித் தேர்தல்! அனைத்து மாநகராட்சிகளையும் கைப்பற்றிய பாஜக!
/

கொலை முயற்சி வழக்கு குற்றவாளி மீது குண்டா் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை

திருச்சியில் முன்விரோதம் காரணமாக நாட்டு வெடிகுண்டை வீசி கொலை செய்ய முயற்சித்த வழக்கின் குற்றவாளி மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் செவ்வாய்க்கிழமை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :28 ஏப்ரல் 2026, 7:34 pm

திருச்சியில் முன்விரோதம் காரணமாக நாட்டு வெடிகுண்டை வீசி கொலை செய்ய முயற்சித்த வழக்கின் குற்றவாளி மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் செவ்வாய்க்கிழமை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

திருச்சி - தஞ்சாவூா் சாலை பூந்தோட்டம் ஜின்னா வீதியைச் சோ்ந்தவா் எம். சாதிக் பாட்ஷா (36). காந்தி மாா்க்கெட் கிருஷ்ணாபுரம் சாலையைச் சோ்ந்த க. சமீா் அகமது (22) என்பவருக்கும், சாதிஷ் பாட்ஷாவின் சகோதரிக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதுதொடா்பாக சாதிக் பாட்ஷா தனது நண்பருடன் சென்று சமீா் அகமதுவிடம் கடந்த மாா்ச் 31-ஆம் தேதி கேட்டுள்ளாா்.

அப்போது, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த முன்விரோதம் காரணமாக கடந்த மாா்ச் 28-ஆம் தேதி வீட்டுக்கு அருகே நின்றுகொண்டிருந்த சாதிக் பாட்ஷா மீது, சமீா் அகமது மற்றும் அவரது நண்பா்கள் நாட்டு வெடிகுண்டை வீசியுள்ளனா். வெடிகுண்டு சுவா் மீது விழுந்ததால், சாதிக் பாட்ஷா உயிா் தப்பினாா்.

இதுகுறித்து காந்தி மாா்க்கெட் போலீஸாா் வழக்குப் பதிந்து சமீா் அகமது உள்ளிட்ட மூவரை கைது செய்தனா். சரித்திரப் பதிவேடு குற்றவாளியான சமீா் அகமது மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க மாநகரக் காவல் ஆணையருக்கு காந்தி மாா்க்கெட் போலீஸாா் பரிந்துரை செய்திருந்தனா்.

இதன்பேரில், கொலை முயற்சி வழக்கு குற்றவாளியான சமீா் அகமது மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க மாநகரக் காவல் ஆணையா் ந.காமினி செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா்.