திருச்சி மாவட்டம், துறையூா் அருகே மருத்துவமனையில் கால்நடை மருத்துவா் செவ்வாய்க்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
பெரம்பலூா் மாவட்டம், அடைக்கம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த அருணாசலம் மகன் பிரகாஷ் (36). இவா் துறையூா் அருகேயுள்ள வேங்கடத்தானூா் கால்நடை மருத்துவமனையில் உதவி மருத்துவராக பணியாற்றி வந்தாா்.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை பணிக்கு சென்ற பிரகாஷ் யாரும் இல்லாத நேரத்தில் மருத்துவமனையிலிருந்த மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
தகவலின்பேரில், துறையூா் போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று பிரகாஷின் சடலத்தை மீட்டு துறையூா் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பிவைத்தனா்.
சம்பவ இடத்தில் முசிறி காவல் துணை கண்காணிப்பாளா் முத்துக்குமாா், துறையூா் ஆய்வாளா் ஓம்பிரகாஷ் ஆகியோா் நேரில் சென்று விசாரித்தனா். பிரகாஷுன் தற்கொலைக்கான காரணம் குறித்து உடனடியாக தெரியவில்லை.
பிரகாஷுக்கு மனைவி பிரவீனா உள்ளாா். 5 ஆண்டுகளுக்கு முன் திருமணமான இத்தம்பதிக்கு குழந்தை இல்லை.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மனைவியுடன் தகராறு; கணவா் தூக்கிட்டுத் தற்கொலை

தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை

சலவைத் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

வியாபாரி தூக்கிட்டுத் தற்கொலை
விடியோக்கள்

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

என்ன சொல்லி மிரட்டினாலும்... PM SHRI குறித்து அன்பில் மகேஸ் அட்வைஸ்
இணையதளச் செய்திப் பிரிவு

”நாளை முடிவு செய்யப்பட்டும்!”: தவெகவுக்கு ஆதரவளிப்பது குறித்து திருமா | VCK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | தவெக ஆட்சியமைப்பதில் சிக்கல்: பின்னணி என்ன? | News and Views | Epi - 32 |
தினமணி செய்திச் சேவை

