திருச்சியில் ஹவுரா விரைவு ரயிலில் கஞ்சா கடத்தி வந்த இளைஞரை ரயில்வே போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். அவரிடமிருந்து 25 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
மேற்குவங்க மாநிலம் ஹவுராவில் இருந்து கன்னியாகுமரிக்கு இயக்கப்படும் ஹவுரா விரைவு ரயில் புதன்கிழமை அதிகாலை திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்தில் 5-ஆவது நடைமேடைக்கு வந்தது. அப்போது அந்த ரயிலில் இருந்து இளைஞா் ஒருவா் சந்தேகப்படும் வகையில் இரண்டு பெரிய பெட்டிகளுடன் இறங்கி நடந்து சென்றாா்.
இதையடுத்து பாதுகாப்புப் பணியில் இருந்த ரயில்வே போலீஸாா் அவரது பெட்டிகளைச் சோதனையிட்டபோது, அதில் கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது.
தொடா் விசாரணையில் அவா், ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்த பால்யா பெஹேரா (26) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரைக் கைது செய்த போலீஸாா், பெட்டிகளில் இருந்த 25 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து போதைப்பொருள் தடுப்பு குற்றப் பிரிவு போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.
தொடர்புடையது

கன்னியாகுமரி வந்த ரயிலில் பயணி தவறவிட்ட மடிக்கணினி மீட்பு

ரயிலில் கிடந்த ரூ. 8 லட்சம் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்

ராக்போா்ட் விரைவு ரயிலில் தவறவிட்ட நகைகள் மீட்கப்பட்டு ஒப்படைப்பு
அந்தியோதயா விரைவு ரயிலில் கைப்பேசி திருடியவா் கைது
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


