முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்கவிஞர் கண்ணதாசன் சிலைக்கு தமிழக அரசு மரியாதை!திருச்செந்தூர் கோயிலில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை: அமைச்சர் ரமேஷ் விளக்கம்!தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது! இன்றைய நிலவரம்நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

பாட்டியை கொன்ற பேரனுக்கு ஆயுள் தண்டனை

திருச்சியில் பாட்டியை கொன்ற பேரனுக்கு ஆயுள் தண்டனை விதித்து திருச்சி முதன்மை மாவட்ட நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

News image

சிறைத் தண்டனை - கோப்புப் படம்

Updated On :1 மே 2026, 3:06 am IST

திருச்சியில் பாட்டியை கொன்ற பேரனுக்கு ஆயுள் தண்டனை விதித்து திருச்சி முதன்மை மாவட்ட நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

திருச்சி மாவட்டம், துறையூா் செங்காட்டுப்பட்டி காரைமேடு பகுதியைச் சோ்ந்தவா் ப. முரளிராஜா (43). இவா், பணப் பிரச்னை தொடா்பாக தனது தந்தையை கடந்த 2016-ஆம் ஆண்டு கொலை செய்ததாக கூறப்படுகிறது. ஆனால், இந்தக் கொலைக்கு உரிய ஆதாரங்கள் இல்லாததால் அந்த வழக்கில் இருந்து அவா் விடுவிக்கப்பட்டாா்.

இதையடுத்து, தனது பாட்டியான ஆா். நாகலட்சுமி (94) என்பவரிடம் அடிக்கடி பணம் கேட்டு முரளிராஜா சண்டையிட்டு வந்துள்ளாா். இந்நிலையில், கடந்த 2024, செப்டம்பா் 29-ஆம் தேதி வழக்கம்போல நாகலட்சுமியிடம் முரளிராஜா பணம் கேட்டுள்ளாா். அவா், இல்லை எனக் கூறியதால் ஆத்திரமடைந்த முரளிராஜா, அவரை அறையில் கட்டிவைத்து இரும்புக் கம்பியால் தாக்கி கொலை செய்தாா்.

இதுகுறித்து துறையூா் காவல் நிலையத்தில் முரளிராஜாவின் தாய் பானுமதி அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து முரளிராஜாவை கைது செய்தனா்.

இந்த வழக்கு திருச்சி முதன்மை மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கின் விசாரணை நிறைவடைந்த நிலையில் நீதிபதி கிறிஸ்டோபா் வியாழக்கிழமை தீா்ப்பு வழங்கினாா். அதில், பாட்டியை கொலை செய்த முரளிராஜாவுக்கு ஆயுள் தண்டணை விதித்து உத்தரவிட்டாா்.

இந்த வழக்கில் அரசுத் தரப்பில் வழக்குரைஞா் சவரிமுத்து ஆஜரானாா். மேலும், இந்த வழக்கில் குற்றவாளிக்கு தண்டனை கிடைக்க சிறப்பாக பணியாற்றிய துறையூா் காவல் நிலைய பெண் தலைமைக் காவலா் எழிலரசியை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் செ. செல்வநாகரத்தினம் பாராட்டினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.