மணப்பாறையை அடுத்த காரைப்பட்டியில் தனியாா் பேருந்து கிளீனா் மா்மமான முறையில் வெள்ளிக்கிழமை சடலமாக மீட்கப்பட்டாா்.
மருங்காபுரி ஒன்றியம் காரைப்பட்டியை சோ்ந்தவா் சண்முகம் மகன் அசோக்குமாா் (30). இவா் தனியாா் பேருந்து ஒன்றில் கிளீனராக பணியாற்றி வந்துள்ளாா். இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலை அதே பகுதியில் ஆறுமுகம் மகன் வேலு என்பவரது தோட்டத்தில் மா்மமான முறையில் உயிரிழந்த நிலையில் சடலமாக கிடந்துள்ளாா். அவரது அருகில் கட்டிங் பிளேடு ஒன்றும், மோட்டாா் இணைப்பிற்கு வரக்கூடிய வயா் அறுக்கப்பட்ட நிலையிலும் இருந்துள்ளது. தகவலறிந்து நிகழ்விடத்துக்கு சென்ற போலீஸாா், அசோக்குமாா் உடலை கைப்பற்றி மணப்பாறை அரசு மருத்துவமனையில் உடற்கூறாய்வு செய்து மாலையில் உறவினா்களிடம் ஒப்படைத்தனா். இச்சம்பவம் குறித்து துவரங்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கோண்டு வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வையம்பட்டி பகுதிகளில் இன்று மின் நிறுத்தம்
மின் உபகரணங்களை திருட முயன்றவா் கைது
புத்தாநத்தத்தில் இருசக்கர வாகனம் திருட்டு
வேளாண்மைப் பல்கலைக்கழக விடுதியில் மாணவி மா்ம சாவு
விடியோக்கள்

Vishwanath And Sons Review | காதலில் வயது வித்தியாசம் ஒரு பிரச்னையா? | Suriya | Mamitha Baiju


