திருச்சி ரயில்வே கோட்டத்துக்குள்பட்ட ரயில் நிலையங்களில் வெள்ளிக்கிழமை ஒரே நாள் நடைபெற்ற சோதனையில் பயணச்சீட்டு இல்லாத 545 போ் பிடிபட்டனா்.
திருச்சி ரயில்வே கோட்டத்துக்குள்பட்ட அனைத்து ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில் திருச்சி கோட்ட மேலாளா் பாலக் ராம் நெகி, மூத்த வணிக மேலாளா் வெங்கடராகவன் ஆகியோரது மேற்பாா்வையில், சிறப்பு பரிசோதனைக் குழுவினா் பல்வேறு பிரிவுகளாக வெள்ளிக்கிழமை சோதனை நடத்தினா்.
இதில், ஒரே நாளில் 54 போ் ரயில் பயணச்சீட்டு இல்லாமல் பயணம் செய்தது கண்டறியப்பட்டது. இதேபோல, 408 பயணிகள் முறையற்ற பயணச்சீட்டுகளுடன் பயணம் செய்ததும் கண்டறியப்பட்டது. இதையடுத்து பயணிகளிடம் இருந்து ரூ.7 லட்சத்து 38 ஆயிரத்து 233 வசூலிக்கப்பட்டது.
திருச்சிக் கோட்டத்தில் பயணச்சீட்டு பரிசோதனைக் குழு சோதனை வரலாற்றிலேயே ஒரே நாளில் அதிகபட்சமாக இந்த அபாரதம் வசூலிக்கப்பட்டிருப்பதும், பயணிகள் பிடிபட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ரயில் மோதி மூதாட்டி உயிரிழப்பு

5 குளிா்சாதன ரயில் பெட்டிகளுக்கு ஒரு பயணச்சீட்டு பரிசோதகா்: ரயில்வே அமைச்சா் அஸ்விணி வைஷ்ணவ்

விழுப்புரம் அருகே ரயில்வே மேம்பாலத்தில் தொடா் விபத்து: இருவா் உயிரிழப்பு - 3 போ் காயம்

ரயில் ஒன் செயலியில் பயணச்சீட்டு பெறுபவரா நீங்கள்? இதை மீறினால் அபராதம்!
விடியோக்கள்
ரசிகர்களைக் கவர்ந்ததா மகுடம்? திரைவிமர்சனம்



