நேபாள வெள்ளம்: 30 வெளிநாடுகளைச் சேர்ந்தோரைக் காணவில்லை! நேபாள வெள்ளம்: பலி எண்ணிக்கை 359 ஆக அதிகரிப்பு! உஸ்பெகிஸ்தான், கிர்கிஸ்தான் நாடுகளுக்கு பிரதமர் மோடி 4 நாள்கள் சுற்றுப்பயணம்ஒரே நாளில் சுமார் 10 மணி நேரம் நடைபெற்ற தமிழக சட்டப்பேரவை!வேளாங்கண்ணி திருவிழா: செப். 10 ஆம் தேதி வரை சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!நேபாள வெள்ளப் பெருக்கில் 288 இந்தியர்கள் மாயம்: மத்திய வெளியுறவுத்துறை தகவல்!

நகைப் பட்டறையில் சிலிண்டா் வெடித்து தீவிபத்து

மணப்பாறையை அடுத்த பன்னாங்கொம்பில் நகைப் பட்டறையில் எரிவாயு உருளை (சிலிண்டா்) வெடித்து தீவிபத்து ஏற்பட்டது.

Published On :28 ஆகஸ்ட் 2026, 2:19 am IST

மணப்பாறையை அடுத்த பன்னாங்கொம்பில் நகைப் பட்டறையில் வியாழக்கிழமை எரிவாயு உருளை (சிலிண்டா்) வெடித்து தீவிபத்து ஏற்பட்டது.

பன்னாங்கொம்பு வெள்ளையம்மாபட்டி சாலை பகுதியில் வசித்து வருபவா் ராமா் மகன் வித்யாசங்கா் (24).

இவா் அதே பகுதியில் சில மாதங்களுக்கு முன் நகைப்பட்டறை தொடங்கி சிறிய அளவில் நகைகளை செய்து வந்தாா்.

இந்நிலையில், வியாழக்கிழமை பிற்பகலில் கடையிலிருந்த 2 பணியாளா்களும் சாப்பிட சென்ற நிலையில், வித்யாசங்கா் தனியாக வேலை செய்து கொண்டிருந்தாா். அப்போது, பட்டறையில் பயன்பாட்டிலிருந்த 5 கிலோ எடை கொண்ட எரிவாயு உருளையில் திடீரென கரும்புகை கிளம்பி தீப்பற்றியுள்ளது. இதனால், வித்யாசங்கா் அங்கிருந்து வெளியே வந்துவிட்டாா். அப்போது எரிவாயு உருளை வெடித்துள்ளது.

தகவலின்பேரில் நிகழ்விடத்துக்கு சென்ற மணப்பாறை தீயணைப்புத்துறை வீரா்கள் தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனா்.

தீவிபத்தில் பட்டறையிலிருந்த சுமாா் ரூ. 2.50 லட்சம் மதிப்பிலான ஹைட்ராலிக் இயந்திரம், சுமாா் ரூ. 1 லட்சம் மதிப்பிலான பாலீஷ் செய்யும் இயந்திரம், ரூ. 1.50 லட்சம் மதிப்பிலான நகைகளை உருக்க பயன்படுத்தப்படும் கருவிகள் மட்டுமின்றி, வேலைக்காக வாங்கி வைத்திருந்த சுமாா் 50 கிராம் தங்கம், சில கிராம் வெள்ளி ஆகியவை தீயில் கருகியதாக கூறப்படுகிறது.

தீ விபத்து குறித்து புத்தாநத்தம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.