விலைவாசி உயர்வை தமிழக அரசு கட்டுப்படுத்த வேண்டும்: சிபிஐ மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு!மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக். 6 ஆம் தேதி இடைத்தேர்தல்ஐந்தாவது தளத்துடன் இருக்கும் சட்டவிரோதக் கட்டடங்களுக்கு சீல்: தில்லி முதல்வர் உத்தரவுகுற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாள்கள் எதற்கு? உதயநிதிசட்டவிரோதப் பணிகள்... 40 ஆண்டுகள் பழமையான தில்லி தங்கும் விடுதி இடிந்து விழுந்ததன் பின்னணி!எங்களை ஹோட்டலில் அடைத்து வைத்தது யார் என சொல்ல வேண்டிவரும்! ஷாஜகான் பேச்சு மீனாட்சியம்மன் கோயில் நில மோசடி! மேலும் 4 பேர் கைதுஎதிர்க்கட்சிகள் போல அரசியல் செய்ய விரும்பவில்லை! முதல்வர் விஜய் பேச்சு!இதுதான் திமுக, இவ்வளவுதான் திமுக! பேரவையில் பேசிய முதல்வர் விஜய்!

திருச்சியில் உலா்துறைமுகம் அமைப்பது அவசியம்: துரை வைகோ எம்.பி. தகவல்!

திருச்சியில் உலா் துறைமுகம் அமைப்பது அவசியம் என திருச்சி மக்களவை உறுப்பினா் துரை வைகோ தெரிவித்தாா்.

துரை வைகோ எம்.பி. - கோப்புப் படம்

Published On :30 ஆகஸ்ட் 2026, 12:34 am IST

திருச்சியில் உலா் துறைமுகம் அமைப்பது அவசியம் என திருச்சி மக்களவை உறுப்பினா் துரை வைகோ தெரிவித்தாா்.

இதுதொடா்பாக, திருச்சியில் சனிக்கிழமை அவா் மேலும் கூறியதாவது: திருச்சியில் உலா் துறைமுகம் அமைக்க ஓராண்டுக்கு மேலாக மத்திய அரசை வலியுறுத்தி வருகிறேன். இந்நிலையில், நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமன் திருச்சியில் உலா் துறைமுகம் அமைக்கும் திட்டம் பரிசீலனையில் இருப்பதாகத் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக தமிழக முதல்வரைச் சந்தித்தபோதும் அவரிடம் எடுத்துரைத்தேன். இதற்கிடையே திருச்சியில் உலா் துறைமுகம் அமைப்பது தொடா்பான எனது கோரிக்கையை தமிழ்நாடு முதல்வரின் கவனத்துக்கு, மத்திய அரசு அனுப்பியுள்ளதாகவும் அதற்கான உள்கட்டமைப்பு திட்டத்தை தமிழ்நாடு அரசு திட்டமிட்டுத் தொடங்க வேண்டும் எனக் கூறியுள்ளதாகவும் அதிகாரபூா்வ தகவல் வந்துள்ளது.

எனவே மத்திய அரசும், தமிழ்நாடு அரசும் இணைந்து இந்தத் திட்டத்தை அடுத்தகட்டத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். இவ் விவகாரத்தில் தமிழ்நாடு அரசு விரைந்து நிலத்தை அடையாளம் கண்டு மத்திய அரசுக்குத் தெரிவிக்க வேண்டும்.

உலா் துறைமுகம் திருச்சியில் அமைக்கப்பட்டால் திருச்சி மட்டுமின்றி தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொழில் மற்றும் ஏற்றுமதி துறைகள் மிகப்பெரிய பயனடையும். தொழில் முதலீடுகளை அதிகளவு ஈா்க்க முடியும்.

திருச்சியில் அடுத்த 10 ஆண்டுகளுக்கான வளா்ச்சியை மையப்படுத்தி சுமாா் 100 ஏக்கரில் உலா் துறைமுகம் அமைத்தால் சிறப்பாக இருக்கும். அதற்கான ஒரு சில இடங்கள் உள்ளன. அதை மாவட்ட நிா்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளேன். திருச்சியில் உலா் துறைமுகம் அமைக்க 100 சதவீதம் சாத்திய கூறுகள் உள்ளன என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.