காங்கிரஸ் நாளுக்கு நாள் பாயும் புலியாக மாறுகிறது - அமைச்சர் விஸ்வநாதன்நேபாள வெள்ள பலி எண்ணிக்கை 788 ஆக அதிகரிப்பு - மீட்புப் பணிகள் தீவிரம்தவெக அரசு 5 ஆண்டுகள் நீடிக்காது; நீடித்தால் தமிழகத்தின் கடன் அதிகரிக்கும்: எடப்பாடி கே. பழனிசாமிநேபாள திடீர் வெள்ள பலி எண்ணிக்கை 768-ஆக உயர்வு; 2,500-க்கும் மேற்பட்டோரை தேடும் பணி தீவிரம்! சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 682 ஆக உயர்வு! தொடரும் மீட்புப் பணிகள்!மு.க. ஸ்டாலினுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு குறைப்பு ஏற்புடையதல்ல: திருமாவளவன்நேபாளத்துக்கு 68.5 டன் நிவாரணப் பொருள்களை அனுப்பிய இந்தியா!நேபாளம்: வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட வங்கி லாக்கரை உடைத்து ரூ.58 லட்சம் திருட்டு!கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டதும் மிகுந்த அதிர்ச்சியடைந்தேன்: சூர்யகுமார் யாதவ்

ரயிலில் அடிபட்டு தொழிலாளி உயிரிழப்பு

உயிரிழப்பு - பிரதிப் படம்

Published On :31 ஆகஸ்ட் 2026, 3:31 am IST

திருச்சி அருகே கம்பரசம்பேட்டையில் ரயிலில் ஞாயிற்றுக்கிழமை அடிபட்டு கூலித் தொழிலாளி உயிரிழந்தாா்.

கரூரிலிருந்து திருச்சி நோக்கி ஞாயிற்றுக்கிழமை மாலை புறப்பட்ட பயணிகள் ரயில் கம்பரசம்பேட்டைக்கு வந்தபோது அதில் ஆண் ஒருவா் அடிபட்டு இறந்தாா். இது தொடா்பாக, ரயில் ஓட்டுநா் அளித்த தகவலின்பேரில் ரயில்வே போலீஸாா், சம்பவ இடத்துக்குச் சென்று விசாரித்தனா்.

விசாரணையில் இறந்தவா், கம்பரசம்பேட்டை பெரியாா் நகரைச் சோ்ந்த சி. கதிா்வேல் (38) என்பதும், கூலித் தொழிலாளியான இவா் தனது வீட்டிலிருந்து கடைக்குச் செல்ல ரயில்வே தண்டவாளத்தை கடந்தபோது, ரயிலில் அடிபட்டு இறந்ததும் தெரியவந்தது.

கதிா்வேலுக்கு மனைவி, இரு ஆண் குழந்தைகள் உள்ளன. விபத்து குறித்து ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.