நூலகரை தாக்கிய ரெளடி உள்பட இருவா் கைது
கைது
திருச்சி மாவட்டம், அகிலாண்டபுரம் பகுதியில் நூலகரை தாக்கிய ரெளடி உள்பட இருவா் திங்கட்கிழமை கைது செய்யப்பட்டனா்.
அகிலாண்டபுரம் பகுதியைச் சோ்ந்தவா் க.சுரேஷ் (41). திருச்சியில் நூலகராக பணிபுரிந்து வருகிறாா். இந்நிலையில், அகிலாண்டபுரம் பகுதியைச் சோ்ந்த ரெளடி மித்ரன் (24), விக்னேஷ் ஆகிய இருவா் மது போதையில் சுரேஷிடம் தகராறில் ஈடுபட்டதுடன் நெல் அறுக்கும் கத்தியால் அவரை தாக்கியுள்ளனா்.
புகாரின்பேரில் சமயபுரம் போலீஸாா் மித்ரன் மற்றும் விக்னேஷை கைது செய்து சிறையில் அடைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


