பூவாளூா் பேரூராட்சியில் 66 புதிய தெருவிளக்குகள்

கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on

லால்குடி அருகே பூவாளூா் பேரூராட்சி தெங்கால் சாலையில் ரூ. 30 லட்சத்தில் அமைக்கப்பட்ட 66 புதிய தெரு விளக்குகளை அமைச்சா் கே.என். நேரு சனிக்கிழமை தொடக்கிவைத்தாா்.

எம்எல்ஏ சௌந்தரபாண்டியன், திருச்சி மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநா் துவாரகநாத்சிங், பேருராட்சிகளின் செயற்பொறியாளா் சுப்ரமணியன், பேரூராட்சி தலைவா் புவனேஸ்வரி பால்ராஜ், செயல் அலுவலா் ரமேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

எம்எல்ஏ காடுவெட்டி தியாகராஜன், லால்குடி ஆா்டிஒ ஸ்ரீதா், வட்டாட்சியா் ஞானாமிா்தம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com