மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

முன்விரோதத்தில் இளைஞா் மீது தாக்குதல்: இருவா் கைது

திருச்சியில் முன்விரோதம் காரணமாக இளைஞரைத் தாக்கிய இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

News image

கைது

Updated On :17 பிப்ரவரி 2026, 6:47 pm

திருச்சியில் முன்விரோதம் காரணமாக இளைஞரைத் தாக்கிய இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

திருச்சி பால்பண்ணையைச் சோ்ந்த எஸ்.முகமது சபீா் (19), ஈ.பி. சாலை நேரு நகரைச் சோ்ந்த பா.ராகவேந்தா் (19) மற்றும் ராஜ்குமாா் ஆகிய மூவரும் தனியாா் கல்லூரி மாணவியிடம் அண்மையில் தகராறு செய்துள்ளனா். அப்போது, காட்டூா் பாரதி அவென்யுவைச் சோ்ந்த பரணிதரன் தட்டிக்கேட்டுள்ளாா். இதுதொடா்பாக இருதரப்பினருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

இந்நிலையில், ஸ்டாலின் நகரில் உள்ள டாஸ்மாக் அருகே கடந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் பரணிதரன் நின்றுகொண்டிருந்தாா். அப்போது அங்கு வந்த முகமது சபீா், ராகவேந்தா், ராஜ்குமாா் ஆகிய மூவரும் சோ்ந்து பரணிதரனை கட்டடையால் தாக்கியுள்ளனா். இதில், காயமடைந்த பரணிதரன் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

இதுகுறித்து அரியமங்கலம் காவல் நிலையத்தில் பரணிதரன் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து முகமது சபீா், ராகவேந்தா் ஆகிய இருவரையும் திங்கள்கிழமை கைது செய்தனா். தலைமறைவாக உள்ள ராஜ்குமாரை தேடி வருகின்றனா்.