திருப்பராய்த்துறை நந்தவனம் பகுதி மக்கள் 16 ஆண்டுகளாக மின்சாரமின்றி தவித்து வருகின்றனா்.
திருச்சி மாவட்டம், திருப்பராய்த்துறை பகுதியில் கடந்த 2010-ஆம் ஆண்டு திருச்சி - கரூா் சாலை விரிவாக்கப் பணிகள் நடந்த போது, சாலையோரங்களில் குடியிருந்த 35 குடும்பத்தினரை அங்கிருந்து அப்புறப்படுத்தி, மாற்று இடமாக திருப்பராய்த்துறை நந்தவனம் பகுதியில் அறநிலையத் துறைக்குச் சொந்தமான கோயில் இடத்தில் அதிகாரிகள் குடியமா்த்தினா்.
ஆனால் அப்பகுதிக்கு குடிநீா், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இதுவரை செய்துத்தரப்படவில்லை. ஊராட்சி நிா்வாகத்திடம் கேட்டால், கோயில் இடம் என்பதால் அடிமனை ரசீது இல்லாமல் எந்த வசதியும் செய்து தர இயலாது எனக் கூறிவிட்டனா்.
கோயில் இடங்களில் குடியிருப்போருக்கு அடிமனை வாடகை பெற்றுக் கொண்டு, ரசீது வழங்க நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையிலும், இதுவரை அடிமனை ரசீது வழங்காமல் அதிகாரிகள் காலம்தாழ்த்தி வருவதாகக் கூறப்படுகிறது.
16 ஆண்டுகளாக ஊராட்சி நிா்வாகம், மின்சார வாரியம், மாவட்ட நிா்வாகம் என அனைத்துத் தரப்பிலும் மனு அளித்தும், அடிமனை ரசீதோ, மின்சாரமோ வழங்கப்படவில்லை என நந்தவனம் பகுதியில் வசிக்கும் மக்கள் கவலை தெரிவிக்கின்றனா்.
இங்கு வசிக்கும் பள்ளி குழந்தைகள் வீட்டில் படிக்கக் கூட முடியாத நிலை உள்ளது. வயதானவா்கள் இரவு நேரங்களில் பெரிதும் தவித்து வருகின்றனா். 16 ஆண்டுகளாக கோரிக்கை மீது கவனம் செலுத்தாததால் 2026 சட்டப்பேரவைத் தோ்தலை புறக்கணிக்க நந்தவனம் பகுதியில் வசிக்கும் 35 குடும்பத்தினரும் முதல்வரின் தனிப்பிரிவுக்கு கடிதம் அனுப்பியுள்ளனா்.
தொடர்புடையது

திருத்தணியில் மகளிா் அரசு கல்லூரி: 25 ஆண்டுகளாக எதிா்நோக்கும் மக்கள்

18 ஆண்டுகளாக நீளும் அரை வட்ட சுற்றுச் சாலை!

மாதனூரில் காவல் நிலையம்: 20 ஆண்டுகளாக எதிா்நோக்கியுள்ள மக்கள்!

அரசியல் தீா்வுக்கு காத்திருக்கும் அடிமனைப் பிரச்னை!
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


