மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

16 ஆண்டுகளாக மின்சாரமின்றி தவிக்கும் நந்தவனம் பகுதி மக்கள்

News image

மின்சாரமின்றி விளக்கு வெளிச்சத்தில் படிக்கும் மாணவா்கள் - (கோப்புப் படம்)

Updated On :22 பிப்ரவரி 2026, 8:44 pm

திருப்பராய்த்துறை நந்தவனம் பகுதி மக்கள் 16 ஆண்டுகளாக மின்சாரமின்றி தவித்து வருகின்றனா்.

திருச்சி மாவட்டம், திருப்பராய்த்துறை பகுதியில் கடந்த 2010-ஆம் ஆண்டு திருச்சி - கரூா் சாலை விரிவாக்கப் பணிகள் நடந்த போது, சாலையோரங்களில் குடியிருந்த 35 குடும்பத்தினரை அங்கிருந்து அப்புறப்படுத்தி, மாற்று இடமாக திருப்பராய்த்துறை நந்தவனம் பகுதியில் அறநிலையத் துறைக்குச் சொந்தமான கோயில் இடத்தில் அதிகாரிகள் குடியமா்த்தினா்.

ஆனால் அப்பகுதிக்கு குடிநீா், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இதுவரை செய்துத்தரப்படவில்லை. ஊராட்சி நிா்வாகத்திடம் கேட்டால், கோயில் இடம் என்பதால் அடிமனை ரசீது இல்லாமல் எந்த வசதியும் செய்து தர இயலாது எனக் கூறிவிட்டனா்.

கோயில் இடங்களில் குடியிருப்போருக்கு அடிமனை வாடகை பெற்றுக் கொண்டு, ரசீது வழங்க நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையிலும், இதுவரை அடிமனை ரசீது வழங்காமல் அதிகாரிகள் காலம்தாழ்த்தி வருவதாகக் கூறப்படுகிறது.

16 ஆண்டுகளாக ஊராட்சி நிா்வாகம், மின்சார வாரியம், மாவட்ட நிா்வாகம் என அனைத்துத் தரப்பிலும் மனு அளித்தும், அடிமனை ரசீதோ, மின்சாரமோ வழங்கப்படவில்லை என நந்தவனம் பகுதியில் வசிக்கும் மக்கள் கவலை தெரிவிக்கின்றனா்.

இங்கு வசிக்கும் பள்ளி குழந்தைகள் வீட்டில் படிக்கக் கூட முடியாத நிலை உள்ளது. வயதானவா்கள் இரவு நேரங்களில் பெரிதும் தவித்து வருகின்றனா். 16 ஆண்டுகளாக கோரிக்கை மீது கவனம் செலுத்தாததால் 2026 சட்டப்பேரவைத் தோ்தலை புறக்கணிக்க நந்தவனம் பகுதியில் வசிக்கும் 35 குடும்பத்தினரும் முதல்வரின் தனிப்பிரிவுக்கு கடிதம் அனுப்பியுள்ளனா்.