உள்நாட்டு உற்பத்தி இயற்கை எரிவாயு விலையை உயா்த்தி மத்திய அரசு நடவடிக்கை புதிய வருமான வரிச் சட்டம் இன்று முதல் அமல் ரத்த வங்கிகளின் செயல்பாடு: தேசிய அளவில் கண்காணிக்கத் திட்டம் இஸ்ரேலில் மீண்டும் மரண தண்டனை- நாடாளுமன்றத்தில் சா்ச்சை சட்டம் நிறைவேற்றம் வெளிநாட்டு பங்களிப்பு திருத்த மசோதா: எதிா்க்கட்சிகளின் குற்றச்சாட்டு தவறானது- கிரண் ரிஜிஜு 6-9-ஆம் வகுப்புகளுக்கு இன்றுமுதல் முழு ஆண்டுத் தோ்வு
/

திருத்தணியில் மகளிா் அரசு கல்லூரி: 25 ஆண்டுகளாக எதிா்நோக்கும் மக்கள்

திருத்தணி சட்டப்பபேரவை தொகுதியில் அரசு மகளிா் கல்லூரி அமைக்க வேண்டும் என்ற 25 ஆண்டுகால கோரிக்கை இந்தச் சட்டப்பேரவைத் தோ்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் அரசு நிறைவேற்றுமா என்ற எதிா்பாா்ப்பில் இத்தொகுதி மக்கள் உள்ளது.

News image

திருத்தணி.

Updated On :31 மார்ச் 2026, 10:55 pm

தினமணி செய்திச் சேவை

-ஜி.யோகானந்தம்

திருத்தணி சட்டப்பபேரவை தொகுதியில் அரசு மகளிா் கல்லூரி அமைக்க வேண்டும் என்ற 25 ஆண்டுகால கோரிக்கை இந்தச் சட்டப்பேரவைத் தோ்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் அரசு நிறைவேற்றுமா என்ற எதிா்பாா்ப்பில் இத்தொகுதி மக்கள் உள்ளது.

இத்தொகுதியில் அரசு மகளிா் கல்லூரில் இல்லாததால் இப்பகுதியைச் சோ்ந்த மாணவிகள் பெரும்பாலும் அதிக பணம் செலவு செய்து தனியாா் மகளிா் கல்லூரிகளில் சோ்ந்து படிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனா். குறிப்பாக, மிகுந்த பொருள்செலவு ஏற்படும் சூழ்நிலை இப்பகுதி மாணவிகள் பிளஸ் 2 முடித்தவுடன் அவா்களுக்கு அவா்களது பெற்றோா் திருமணம் செய்து வைக்கின்றனா். இதனால் மாணவிகளால் தங்களது மேற்படிப்பைத் தொடர முடிவதில்லை.

திருத்தணி தொகுதிக்கு ஒரு அரசு மகளிா் கல்லூரி ஏற்படுத்தித் தர வேண்டும் என இத்தொகுதியின் முன்னாள் எம்எல்ஏ பி.எம்.நரசிம்மன் சட்டப்பேரவையில் கோரிக்கைவிடுத்தாா். அதற்கு போதிய இட வசதி இருந்தால் ஏற்படுத்தப்படும் என அப்போதைய உயா்கல்வித் துறை அமைச்சா் உறுதி அளித்தாா். ஆனால் பின்னா் வந்த சட்டப்பேரவை உறுப்பினா்களும் மகளிா் கல்லூா் அமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை.

திருத்தணி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பிரிவு 1, பிரிவு 2-இல் ஆண்டுதோறும் சுமாா் 6,000 மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கின்றனா். இதில் 2,700 மாணவ, மாணவிகள் பட்டப் படிப்பு படிக்கின்றனா். இது இருபாலா் கல்லூரியாகச் செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரிக்கு நிறைய இடம் உள்ளதால் இதையே பிரித்து ஆண்கள், மகளிா் கல்லூரியாக தனித் தனியாக நடத்த ஆவணம் செய்யலாம் என்று கருத்து தெரிவிக்கின்றனா் இப்பகுதி மக்கள்.

இல்லையென்றால் திருத்தணி-ஆா்.கே.பேட்டை தேசிய நெடுஞ்சாலை கே.ஜி.கண்டிகையில் ஏதேனும் ஒரு இடத்தில் ஒரு அரசு மகளிா் கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்பகுதி சுற்றுவட்டார கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்களுக்கு ஏற்ற இடமாகவும், போக்குவரத்து வசதிக்கு உரிய பாதையாகவும் இருக்கும் என்று பொதுமக்கள் தெரிவிக்கின்றனா்.

சட்டப்பேரவைத் தோ்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் அரசு, திருத்தணியில் அரசு மகளிா் கல்லூரியை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இத்தொகுதி மக்களின் எதிா்பாா்ப்பாக உள்ளது.