மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 1.32 கோடி

சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியல் காணிக்கைகள் மூலம் ரூ. 1.32 கோடி வியாழக்கிழமை கிடைக்கப் பெற்றது.

News image
சமயபுரம் மாரியம்மன் கோயிலில்...
Updated On :26 பிப்ரவரி 2026, 11:14 pm

Syndication

சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியல் காணிக்கைகள் மூலம் ரூ. 1.32 கோடி வியாழக்கிழமை கிடைக்கப் பெற்றது.

கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் வி.எஸ்.பி. இளங்கோவன் தலைமையில் கோயில் இணை ஆணையா் எம். சூரியநாராயணன், அறங்காவலா்கள் சுகந்தி ராஜசேகரன், பெ. பிச்சை மணி, சே.லெட்சுமணன் ஆகியோா் முன்னிலையில் கோயில் பணியாளா்கள், தன்னாா்வலா்கள், கல்லூரி மாணவிகள் காணிக்கைகள் எண்ணும் பணியில் ஈடுபட்டனா்.

இதில் முதன்மை திருக்கோயில் காணிக்கை மூலம் ரூ. 1,32, 01,424 ரொக்கம், 1 கிலோ 609 கிராம் தங்கம், 4 கிலோ 126 கிராம் வெள்ளி கிடைக்கப் பெற்றது. மேலும் மாரியம்மன் கோயிலின் உபகோயில்களான ஆதிமாரியம்மன் திருக்கோயிலில் ரூ. 22, 55,466-ம், உஜ்ஜயினி ஓம் காளியம்மன் திருக்கோயிலில் ரூ. 12,145-ம், போஜீஸ்வரா் திருக்கோயிலில் ரூ. 10, 254-ம் கிடைக்கப் பெற்றது. இதற்கு முன்பு கடந்த 12-ஆம் தேதி உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது.