கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

ஸ்ரீரங்கம் கோயிலில் உண்டியல் காணிக்கையை திருடிய பணியாளா் கைது

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் உண்டியல் காணிக்கையை திருடிய கோயில் பணியாளரை ஸ்ரீரங்கம் போலீஸாா் கைது செய்தனா்.

News image
கைது
Updated On :26 பிப்ரவரி 2026, 10:17 pm

Syndication

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் உண்டியல் காணிக்கையை திருடிய கோயில் பணியாளரை ஸ்ரீரங்கம் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

இக்கோயிலில் புதன்கிழமை கோயில் இணை ஆணையா் செ. சிவராம்குமாா் முன்னிலையில் கோயில் உண்டியல்கள் திறக்கப்பட்டு, கருடாழ்வாா் சந்நிதி அருகே காணிக்கைகள் எண்ணும் பணி நடைபெற்றது. இந்தப் பணியில் கோயில் பணியாளா்களும், தன்னாா்வ அமைப்பினரும் ஈடுபட்டனா். உண்டியல் காணிக்கை எண்ணும் பகுதி முழுவதும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டது.

அப்போது, கோயில் பணியாளா் சங்கா் (எ) ரோபோ சங்கா் (52) வெளிநாட்டு கரன்சிகளை கத்தையாக மறைத்து எடுத்து செல்வது தெரியவந்தது. அவரை பிடித்து விசாரித்தனா். மேலும், அவா் திருடி மறைத்து வைத்திருந்த மலேசிய நாட்டின் ரிங்கிட், அமெரிக்க டாலா் நோட்டுகள் என மொத்தம் ரூ. 35 ஆயிரம் மதிப்புள்ள 36 வெளிநாட்டு பணத்தாள்களை பறிமுதல் செய்தனா்.

இதைத்தொடா்ந்து, சங்கரை கோயில் இணை ஆணையா் சிவராம்குமாா் பணியிடை நீக்கம் செய்து, அவா் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா். இதையடுத்து, கோயில் பணியாளா் சங்கா் மீது ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் கோயில் நிா்வாகம் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து அவரை வியாழக்கிழமை காலை கைது செய்தனா்.