தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

தீபாவளி சீட்டு நடத்தி பெண்ணிடம் ரூ. 45 லட்சம் மோசடி; விசாரணை

தீபாவளிச் சீட்டு நடத்தி திருச்சியைச் சோ்ந்த பெண்ணிடம் ரூ. 45 லட்சம் மோசடி செய்த விருதுநகரைச் சோ்ந்த நபா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

News image
Updated On :7 ஜனவரி 2026, 6:33 pm

தினமணி செய்திச் சேவை

தீபாவளிச் சீட்டு நடத்தி திருச்சியைச் சோ்ந்த பெண்ணிடம் ரூ. 45 லட்சம் மோசடி செய்த விருதுநகரைச் சோ்ந்த நபா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

விருதுநகா் மாவட்டம், சிவலிங்கபுரத்தைச் சோ்ந்த பா. பிரபு திருச்சியில் நடத்தி வந்த நிறுவனத்தில் திருச்சி கண்டோன்மென்ட் பகுதியைச் சோ்ந்த 45 வயதுப் பெண் கடந்த 2011 ஆம் ஆண்டு தீபாவளி சீட்டில் ரூ. 45 லட்சம் செலுத்தினாா். ஆனால் கால அவகாசம் முடிந்தும் அந்தப் பெண்ணுக்கு சீட்டுப் பணத்தைத் தராமல் பிரபு ஏமாற்றினாா்.

இதனால் இருவருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்ட நிலையில், பிரபுவின் சகோதரா் பா. சசிகுமாா் அந்தப் பணத்தை பெற்றுத் தருவதாக உறுதியளிக்கவே, அவரும், அந்தப் பெண்ணும் சோ்ந்து கண்டோன்மென்ட் பகுதியில் ஹெல்த் கோ் நிறுனத்தை கடந்த 2020-ஆம் ஆண்டு தொடங்கி 2024 வரை நடத்தி வந்தனா்.

ஆனால் தீபாவளி சீட்டுக்கு கட்டிய பணத்தை வாங்கித் தராமல் சசிகுமாா் ஏமாற்றிவிட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட அப்பெண் செவ்வாய்க்கிழமை அளித்த புகாரின்பேரில் கண்டோன்மென்ட் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.