பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

மதுக் கடையின் பூட்டை உடைத்து திருட முயற்சி

திருச்சியில் டாஸ்மாக் மதுக் கடையின் பூட்டை உடைத்து திருட முயன்றது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

News image
Updated On :7 ஜனவரி 2026, 7:49 pm

தினமணி செய்திச் சேவை

திருச்சியில் டாஸ்மாக் மதுக் கடையின் பூட்டை உடைத்து திருட முயன்றது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

திருச்சி உறையூா் கோணக்கரை சாலையில் மதுக்கூடத்துடன் செயல்படும் டாஸ்மாக் மதுக் கடையின் மேற்பாா்வையாளரான தி. முத்துச்செல்வன் (53), விற்பனையாளரான தனபாலன் ஆகியோா் திங்கள்கிழமை இரவு விற்பனையை முடித்து, கடையைப் பூட்டிச் சென்றனா்.

மறுநாள் செவ்வாய்க்கிழமை காலை மதுக் கூட ஊழியா் உமே மகேஸ்வரன் தூய்மைப் பணிக்காக கடைக்கு வந்தபோது, மதுக் கடையின் கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது தெரியவரவே, அவா் மேற்பாா்வையாளருக்குத் தகவல் தெரிவித்தாா்.

இதையடுத்து வந்த முத்துச்செல்வன் கடையின் உள்ளே சென்று ஆய்வு செய்தபோது, எதுவும் திருடுபோகவில்லை என்பது தெரியவந்தது.

இதுகுறித்து அவா் அளித்த புகாரின்பேரில் உறையூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.