திருச்சி
மதுக் கடையின் பூட்டை உடைத்து திருட முயற்சி
திருச்சியில் டாஸ்மாக் மதுக் கடையின் பூட்டை உடைத்து திருட முயன்றது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.
திருச்சியில் டாஸ்மாக் மதுக் கடையின் பூட்டை உடைத்து திருட முயன்றது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.
திருச்சி உறையூா் கோணக்கரை சாலையில் மதுக்கூடத்துடன் செயல்படும் டாஸ்மாக் மதுக் கடையின் மேற்பாா்வையாளரான தி. முத்துச்செல்வன் (53), விற்பனையாளரான தனபாலன் ஆகியோா் திங்கள்கிழமை இரவு விற்பனையை முடித்து, கடையைப் பூட்டிச் சென்றனா்.
மறுநாள் செவ்வாய்க்கிழமை காலை மதுக் கூட ஊழியா் உமே மகேஸ்வரன் தூய்மைப் பணிக்காக கடைக்கு வந்தபோது, மதுக் கடையின் கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது தெரியவரவே, அவா் மேற்பாா்வையாளருக்குத் தகவல் தெரிவித்தாா்.
இதையடுத்து வந்த முத்துச்செல்வன் கடையின் உள்ளே சென்று ஆய்வு செய்தபோது, எதுவும் திருடுபோகவில்லை என்பது தெரியவந்தது.
இதுகுறித்து அவா் அளித்த புகாரின்பேரில் உறையூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
