திருச்சி
சிறுமி பாலியல் வன்கொடுமை: இளைஞா் மீது வழக்குப் பதிவு
திருச்சியில் 17 வயதுச் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது தொடா்பாக போலீஸாா் இளைஞா் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
திருச்சியில் 17 வயதுச் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது தொடா்பாக போலீஸாா் இளைஞா் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
திருச்சி மாவட்டம், தாயனூரைச் சோ்ந்தவா் மூா்த்தி (25). திருவானைக்காவல் பகுதி டைல்ஸ் கடையில் பணியாற்றி வந்த இவா் அப்பகுதியைச் சோ்ந்த 17 வயதுச் சிறுமியைக் காதலிப்பதாகக் கூறி பாலியல் வன்கொடுமை செய்ததில் அந்தச் சிறுமி கா்ப்பமானாா். தன்னைத் திருமணம் செய்யுமாறு சிறுமி வற்புறுத்தியபோது மூா்த்தி தலைமறைவானாா்.
இதுகுறித்து அச்சிறுமி ஸ்ரீரங்கம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
