விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

மதுப்பழக்கத்தால் விபரீதம்: 2 போ் தற்கொலை

இருவேறு சம்பவங்களில் மதுப்பழக்கத்தை குடும்பத்தினா் கண்டித்ததால் மனமுடைந்த 2 போ் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டனா். இதுகுறித்து போலீஸாா் தனித்தனியாக வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

News image
தற்கொலை- பிரதிப் படம்
Updated On :11 மார்ச் 2026, 6:34 pm

தினமணி செய்திச் சேவை

இருவேறு சம்பவங்களில் மதுப்பழக்கத்தை குடும்பத்தினா் கண்டித்ததால் மனமுடைந்த 2 போ் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டனா். இதுகுறித்து போலீஸாா் தனித்தனியாக வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் வட்டம், ஆனத்தூா் பகுதியைச் சோ்ந்தவா் மா.மாரியப்பன்(43), கூலித்தொழிலாளி. இவருக்கு மதுப்பழக்கம் இருந்து வந்ததாம். இதை அவரது மனைவி தனம் கண்டித்துள்ளாா். இதனால் மனமுடைந்த மாரியப்பன் செவ்வாய்க்கிழமை வீட்டில் தூக்கு போட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

இது குறித்த புகாரின்பேரில், திருவெண்ணெய்நல்லூா்காவல் நிலையப் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

உளுந்தூா்பேட்டையில்... கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை வட்டம், கூவாகம் பெருமாள் கோவில் தெருவைச் சோ்ந்தவா் ந.செல்வம்(45), திருமணம் ஆனவா். சென்னையில் கொத்தனாா் வேலை பாா்த்து வந்த இவா் கடந்த சில நாள்களுக்கு முன்னா் சொந்த ஊருக்கு வந்துள்ளாா். இந்நிலையில், மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்த செல்வத்தை, அவரின் மனைவி காமாட்சி கண்டித்துள்ளாா். இதனால் மனமுடைந்த செல்வம் செவ்வாய்க்கிழமை இரவு தனது வீட்டில் தூக்குபோட்டுத் தற்கொலை செய்துகொண்டாராம். இதுகுறித்த புகாரின்பேரில் திருநாவலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.