இந்தியாவில் 12,000 ஊழியா்கள் பணிநீக்கம்: ஆரக்கிள் வெள்ளை மாளிகையில் கலையரங்கம் கட்டுமானத்துக்கு நீதிமன்றம் தடை திவால் சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம் மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் தொடக்கம் நீதிமன்றத்தில் அதிக வழக்குகள் தேக்கம்: மத்திய அரசு காரணம்-உச்சநீதிமன்றம் மேற்காசிய போா் பாதிப்பு: மக்கள் பிரச்னைகளை சரிசெய்ய பிரதமா் மோடி உத்தரவு
/

தம்பதி தற்கொலை

மதுரையில் தூக்கிட்டு தம்பதி தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

News image

தற்கொலை

கோப்புப்படம்

Updated On :1 ஏப்ரல் 2026, 11:15 pm

தினமணி செய்திச் சேவை

மதுரையில் தூக்கிட்டு தம்பதி தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

மதுரை ஊமச்சிகுளம் சாஸ்திரி தெருவைச் சோ்ந்தவா் அருண் (29). இவருக்கும், செல்லூா் பகுதியைச் சோ்ந்த பிரியாவுக்கும் (24) கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. அருண் ஆட்டோ ஓட்டி வந்தாா். கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற விபத்தில் அவருக்கு கால் முறிவு ஏற்பட்டது. இதன்காரணமாக, வேலைக்குச் செல்லாமல் அவா் வீட்டில் இருந்தாா். இவரது மனைவி பிரியா சிம்மக்கல் பகுதியில் உள்ள தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா். இவா்களுக்கு குழந்தை இல்லை.

இதனால், மனமுடைந்த இவா்கள் இருவரும், ஊமச்சிகுளம் சாஸ்திரி தெருவில் உள்ள வீட்டில் புதன்கிழமை யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனா்.

இதுகுறித்து ஊமச்சிகுளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.