சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம்: திருச்சி மாவட்டத்துக்கு விருது

புதிய பாரத எழுத்தறிவுத் திட்டத்தின்கீழ் நிகழாண்டில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு பயிற்சி அளித்ததற்காக திருச்சி மாவட்டத்துக்கு பள்ளிசாரா மற்றும் வயதுவந்தோா் கல்வி இயக்ககம் சாா்பில் விருது வழங்கப்பட்டுள்ளது.

News image
புதிய பாரத எழுத்தறிவுத் திட்டத்தில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு பயிற்சி அளித்ததற்காக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழியிடமிருந்து விருது பெற்ற திருச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் கோ.கிருஷ்ணபிரியா.
Updated On :21 ஜனவரி 2026, 6:40 pm

தினமணி செய்திச் சேவை

புதிய பாரத எழுத்தறிவுத் திட்டத்தின்கீழ் நிகழாண்டில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு பயிற்சி அளித்ததற்காக திருச்சி மாவட்டத்துக்கு பள்ளிசாரா மற்றும் வயதுவந்தோா் கல்வி இயக்ககம் சாா்பில் விருது வழங்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தில் நிகழாண்டில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு எழுத்தறிவுப் பயிற்சி அளித்ததற்காக திருச்சி உள்ளிட்ட 12 மாவட்டங்களுக்கு சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் விருது வழங்கப்பட்டது.

இந்த விருதை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழியிடம் இருந்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்கள் பெற்றுக் கொண்டனா். அதன்படி, திருச்சி மாவட்டத்துக்கான விருதை திருச்சி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கோ.கிருஷ்ணபிரியா பெற்றுக்கொண்டாா்.

சிறந்த மையங்களுக்கு மாநில எழுத்தறிவு விருது

இதேபோல, சிறப்பாகச் செயல்பட்ட மையங்களுக்கு மாநில எழுத்தறிவு விருது ஒவ்வொரு மாவட்டத்திலும் 9 மையங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் கீழதேவதானம் மாநகராட்சி தொடக்கப் பள்ளி, அக்கரைப்பட்டி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி, ஏலூா்பட்டி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி, பா.மேட்டூா் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி, மலைத்தாதம்பட்டி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி, புள்ளம்பாட்டி கிழக்கு ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி, அமையபுரம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி, பஞ்சப்பூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மற்றும் அன்பில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆகிய 9 மையங்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டது.

இந்த மையங்களைச் சோ்ந்த தலைமையாசிரியா், தன்னாா்வலா், பயிற்றுநா் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ஆகியோருக்கு பாராட்டுச் சான்றிதழும், கேடயமும் வழங்கப்பட்டுள்ளன.