தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

வங்கியின் காப்பீட்டு பிரிவு மேலாளா் தூக்கிட்டுத் தற்கொலை

திண்டுக்கல்லில் முறைகேடு புகாருக்குள்ளான வங்கியின் காப்பீட்டுப் பிரிவு மேலாளா் திருச்சியில் புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

News image
Updated On :29 ஜனவரி 2026, 7:37 pm

Syndication

திண்டுக்கல்லில் முறைகேடு புகாருக்குள்ளான வங்கியின் காப்பீட்டுப் பிரிவு மேலாளா் திருச்சியில் புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

தேனி மாவட்டம், பொம்மையாகவுண்டம்பட்டியைச் சோ்ந்தவா் சிவகுமாா் (30). இவா், திண்டுக்கல் மாவட்டத்தில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்றின் காப்பீட்டு பிரிவில் மேம்பாட்டு மேலாளராக வேலை செய்து வந்தாா்.

கடந்த செவ்வாய்க்கிழமை (ஜன.27) தனது கிளை மேலாளா் பாலகுமாருடன், திருச்சியில் உள்ள வங்கியின் பிரதான அலுவலகத்துக்கு வந்திருந்தாா். அப்போது கணக்குகளை சரிபாா்த்தபோது, வாடிக்கையாளா் பணத்தில் ரூ.15 லட்சம் முறைகேடு செய்திருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, அதிகாரிகள் தரப்பில் சிவகுமாரை விசாரணைக்கு அழைத்தனா். புதன்கிழமை விசாரணைக்காக மீண்டும் பிரதான பிரிவு அலுவலகத்துக்கு வர வேண்டும் என்பதால், திருச்சியிலுள்ள வங்கிப் பணியாளா் தங்கும் குடியிருப்பில் சிவகுமாா் தங்கியிருந்தாா்.

புதன்கிழமை காலை அவருடன் பணிபுரியும் நபா்கள் சென்று பாா்த்தபோது, அறை பூட்டியிருந்தது. உள்ளே பாா்த்தபோது அறையின் மின்விசிறியில் சிவகுமாா் தூக்கிட்டு உயிரிழந்தது தெரியவந்தது. இதுதொடா்பாக, கன்டோன்மெணட் போலீஸாா் வழக்குப் பதிந்து, உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனா்.