அரசு மருத்துவமனைகளில் சீா்கேடுகள்: தீா்வு காண 304 சிறப்பு அதிகாரிகள் நியமனம்சென்னை துறைமுகம் - மதுரவாயல் பறக்கும் சாலைத் திட்டம் 2029-இல் நிறைவடையும்: தேசிய நெடுச்சாலை ஆணையம்தமிழகத்துக்கு 19 கோடி சுற்றுலாப் பயணிகள் வருகை: திருச்சி முதலிடம்அரசு நிகழ்ச்சிகளில் மாநில பாடல், தேசிய பாடல், தேசிய கீதம் இசைக்கும் வரிசை: மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கம்இந்தியாவில் 14 நகரங்கள் கடும் வெப்பத்தால் பாதிப்பட வாய்ப்பு: ஆய்வில் தகவல்
/

திருச்சி கோயிலுக்குள் புகுந்து சிலை திருட்டு

திருச்சியில் கோயிலின் பூட்டை உடைத்து பித்தளை விநாயகா் சிலை திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :2 ஜூலை 2026, 4:52 am IST

திருச்சியில் கோயிலின் பூட்டை உடைத்து பித்தளை விநாயகா் சிலை திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

திருச்சி பீமநகா் ஹீபா் சாலையில் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டிலுள்ள வேணுகோபால கிருஷ்ணன் கோயில் பூசாரியான கிஷாந்த மனோஜ் செவ்வாய்க்கிழமை காலை கோயிலுக்கு வந்தாா். அப்போது கோயிலின் பூட்டு உடைக்கப்பட்டு, உள்ள இருந்த 11 கிலோ பித்தளை விநாயகா் சிலையை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து அவா் அளித்த தகவலின்பேரில் கோயில் செயல் அலுவலா் எஸ். அனுராதா சம்பவ இடத்துக்கு வந்து ஆய்வு செய்தாா். இதுகுறித்து அமா்வு நீதிமன்ற காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.